அரசியல்வாதிக்கு ஆதரவாக கருத்துக்கள் பேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்தி ஐடி கம்பெனிகளின் சதி அம்பலம்

நாட்டையே உலுக்கும் புதுவிதமான ஆன்லைன் சதி அம்பலம் ஆகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்தி பெரும் மோசடி நடந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை எல்லாருக்கும் ரகசிய வழியில் உதவும் இந்த பெரும் சதி பிசினசை முழுக்க முழுக்க ஐடி கம்பெனிகள் செய்கின்றன என்பது தான் அதிர்ச்சி தரும் விஷயம். *குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.
* எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.
* குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.
* தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
* உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார். ‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. அதில் சில கம்பெனிகள் மற்றும் அவர்கள் நடத்திய பேரம் பற்றிய விவரம்:
* மும்பை ஓம் கன்சல்டன்சி சர்வீஸ். இதன் உரிமையாளர் பிபின் பத்தாரே. ‘ஒண்ணும் கவலைப்படாதீங்க. என்னிடம் தனி சாப்ட்வேர் இருக்கு. எந்த தொகுதியில் எந்த வார்டுல எத்தனை பேர் எந்த ஜாதி என்பது வரை இதுல இருக்கு. யார் உங்களுக்கு எதிரா ஓட்டு போடுவாங்கன்னு தெரிஞ்சா, அவங்களை பூத்துக்கு வராம தடுத்திடலாம் என்றார் பத்தாரே.
* டெல்லி விரிஞ்சி சாப்ட்வேர் அபிஷேக் குமார். இவரின் கம்பெனி பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மன்மோகன் சிங் கார்ட்டூனை காண்பித்த அவர், காங்கிரஸ் என்றால் மருமகன் வத்ரா. வத்ரா கை இல்லாமல் எதுவும் இல்லை என்று போட்ட பேஸ்புக் கருத்துக்களை காட்டுகிறார். ‘உங்களுக்கு இப்படி போட்டு பட்டய கிளப்பறோம். நேதாஜி கண்டிப்பாக வெற்றி பெறுவார். எவ்வளவு ‘லைக்’ எவ்வளவு ‘எதிர்ப்பு’ கருத்து வரணும்ன்னு மட்டும் சொல்லுங்க’ என்கிறார். இத்துடன் இவர் விடவில்லை. ‘பாகிஸ்தான் தாக்கினா என்ன மோடி வரணும். சீனா ஊடுருவினா என்ன மோடி வந்தா போதும்’ என்றும் சொல்கிறார்.
* பெங்களூர் ட்ரயம் கம்பெனியின் ட்ரிகாம் படேல் சொல்லும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சி தரத்தக்கவை. ‘நான் இரண்டரை வருஷமா இந்த வேலையை செய்றேன். ப்ராஜக்ட் எல்லாம் வெளியேயிருந்து வர மாட்டேங்குது. என்ன நான் மட்டுமா பண்றேன் இந்த தொழிலை. பெங்களூருல உள்ள 3 சதவீத கம்பெனிகள் இந்த பிசினசை தான் செய்கின்றன. நேதாஜிக்கு ஆதரவா கட்டுரைகள் வெளியிடணுமா? கார்ட்டூன் போடணுமா? ரேட் சொல்றேன், அட்வான்ஸ் கொடுத்திட்டு போங்க என்கிறார்.
* டெல்லி குர்கான் வெப்சால் மீடியா. இதன் உரிமையாளர் பிரியதர்ஷன் பதக் நடத்திய பேரத்தில், ‘உங்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ‘லைக்’ போடுறோம். பேஸ்புக்குல ஒரு மாதத்துக்கு போட்டா போதுமா? என்கிறார்.
* மோகித் மகாஜன், ரோகித் மகாஜன், ஸ்வேதங்க் பதக், விகாஸ் சோப்ரா: இவர்கள் எல்லாம் மேற்குறிப்பிட்ட கம்பெனிகளுக்காக வேலை செய்பவர்கள். இவர்கள் தான் ‘லைக்ஸ்’ போடுவது, எதிர்ப்பு கருத்துக்களை பேஸ்புக்கில் போடுவது. இவர்கள் கூறுகையில், ‘எங்ககிட்டே ஆயிரக்கணக்கில் கருத்துகள் ரெடியாக உள்ளன. அவதூறாக போடணும்ன்னா தனி செட் உள்ளது. நீங்க செலக்ட் பண்ணா போட்டுடுவோம். எங்களுக்கு தனி கட்டணம் உண்டு’ என்றனர்.
* டெல்லி தேராவல்நகர் வெப்ஸ்ட்ரீக்ஸ் நிறுவனம். அதன் உரிமையாளர்கள் விஷால் செய்னி, ஹர்மித் சிங். ‘நாங்க காங்கிரசுக்கு ஆதரவாகவும் ‘லைக்ஸ்’ போடுவாம். பாஜவுக்கு ஆதரவாகவும் போடுவோம். ஒங்களுக்கு நேதாஜிக்கு ஆதரவா 10 லட்சம் ‘லைக்ஸ்’ போடவா? என்கிறார்.
* ப்ளூ சபையர் கிரியேஷன்ஸ். இதன் நிர்வாகிகள் பன்வார் ராகேஷ் கூறுவது இன்னும் ஆச்சரியமானது. ‘நாங்க சிபிஐ, ராவுக்கே கூட வேலை செய்யறோம். யாரை அசிங்கப்படுத்தணும் சொல்லுங்க. யாருக்கும் தெரியாம பண்ணிடலாம். எங்களை விட மற்ற இடங்கள்ல ரேட் அதிகம்.
* மும்பையின் பிரிஸ்மார்டெக் நிறுவனம். இதன் உரிமையாளர் விவேக் அரோரா, ‘நாங்க தெளிவாக வேலை செய்றோம். ஐபி அட்ரஸ் கூட தெரியாது. உடனே அழிச்சிடுவோம்’ இப்படி 24 ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் வெளிப்படையாக பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து கோப்ரா போஸ்ட் அனிரூத் பாகல் கூறுகையில்,‘இந்த கம்பெனிகள் செய்யும் தொழில், குற்றச்சட்டம், சைபர் குற்றம் சட்டம் என்று எல்லா குற்ற சட்டங்களுக்கும் எதிரானது. இது பற்றி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஆபரேஷன் ப்ளூ வைரஸ்
* கோப்ராபோஸ்ட் நடத்திய இந்த ரகசிய ‘ஸ்டிங்’ நடவடிக்கைக்கு பெயர் ‘ஆபரேஷன் ப்ளூ வைரஸ்’
* 24 ஐடி நிறுவனங்களின் உண்மையான ‘சதி’ பிசினசை இது அம்பலப்படுத்தியுள்ளது.
* இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் ஐபி முகவரிகளை வைத்துள்ளன.
* லட்சக்கணக்கில் போலி பெயர்களை பதிவு செய்து தனி பைல்களை வைத்துள்ளன.
* ஒரு ‘லைக்’க்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.
* அதிகாரிகளை அசிங்கப்படுத்தவும் கூட தனி போலி வெப்சைட்கள், ப்ளாக்குகளை வைத்துள்ளன.
* இந்த நிறுவனங்கள் சர்வர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ளன.
* குறிப்பிட்ட பேரம் முடிந்து வேலை முடிந்து விட்டால், அந்த சர்வரை அப்படியே விட்டு விடுவர்.
* அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் தான் இவர்களின் சர்வர்கள் உள்ளன.
* வலைதளங்களில் சதி செய்வதுடன், அடியாட்களை திரட்டுவது கூட இவர்களின் வேலை.
* பெங்களூர் உட்பட சில நகரங்களில் வெளிநாட்டு ப்ராஜக்ட்கள் கிடைக்காத நிறுவனங்கள் வேலை இது தான்.
* அந்த நிறுவனங்களுக்கு இப்படி ‘மோசடி’ பிரசாரத்தில் தான் வருமானமே கிடைக்கிறது.
* 24 ஐடி நிறுவனங்களின் உண்மையான ‘சதி’ பிசினசை இது அம்பலப்படுத்தியுள்ளது.
* இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கில் ஐபி முகவரிகளை வைத்துள்ளன.
* லட்சக்கணக்கில் போலி பெயர்களை பதிவு செய்து தனி பைல்களை வைத்துள்ளன.
* ஒரு ‘லைக்’க்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.
* அதிகாரிகளை அசிங்கப்படுத்தவும் கூட தனி போலி வெப்சைட்கள், ப்ளாக்குகளை வைத்துள்ளன.
* இந்த நிறுவனங்கள் சர்வர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ளன.
* குறிப்பிட்ட பேரம் முடிந்து வேலை முடிந்து விட்டால், அந்த சர்வரை அப்படியே விட்டு விடுவர்.
* அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் தான் இவர்களின் சர்வர்கள் உள்ளன.
* வலைதளங்களில் சதி செய்வதுடன், அடியாட்களை திரட்டுவது கூட இவர்களின் வேலை.
* பெங்களூர் உட்பட சில நகரங்களில் வெளிநாட்டு ப்ராஜக்ட்கள் கிடைக்காத நிறுவனங்கள் வேலை இது தான்.
* அந்த நிறுவனங்களுக்கு இப்படி ‘மோசடி’ பிரசாரத்தில் தான் வருமானமே கிடைக்கிறது.
உண்மை தான் மத்திய அரசு பதில்
கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நன்றி : ஹாட் நியுஸ்