காருக்குள்ளே சிக்னல்...!

PUTHIYA THOLILNUTPAM
கார் ஓட்டுபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ‘ட்ராபிக்’. எந்த இடத்தில் எப்போது சிக்னல் விழும் என்று தெரியாது.
இந்நிலையில் காரில் சென்றுகொண்டிருக்கும்போதே அடுத்த சிக்னலின் நிலையை சொல்லும் விதமாக புதுக்கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அமெரிக்காவின் விர்ஜினியா கல்வி நிறுவன ஆய்வு மாணவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கையளவு உள்ள இந்த கருவியில் திரை ஒன்றும் உள்ளது. இதை காரில் பொருத்திவிட்டால், அடுத்தடுத்து உள்ள சிக்னல் குறித்தும், நகரில் எந்த பகுதியில் ட்ராபிக் ஜாம் என்பதையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

THANKS ; THE HINDU