இணையத்தை குழப்பிய பள்ளிக் கணக்கு: உங்களுக்கு விடை தெரியுமா?

செரிலின் பிறந்தநாள் உங்களுக்கு தெரியுமா? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க இணையமே குழம்பித் தவித்திருக்கிறது என்பதும் தெரியுமா?யார் இந்த செரில்? அவரது பிறந்தநாள் ஏன் தெரிய வேண்டும் என்றெல்லாம் கேட்பதற்கு முன் கவனிக்க, இது வெறும் கேள்வி அல்ல, பள்ளித்தேர்வு ஒன்றில் கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விதான் இது.இந்தக் கேள்வி கேட்கப்பட்ட சுவாரஸ்யமான விதமும், இதற்கான பதிலை கண்டுபிடிக்க முடியாத குழப்பமும் இதன் செர்லி பிறந்தநாள் தெரியுமா? என இணையத்தை கேட்க வைத்துள்ளது.இன்னும் கொஞ்சம் விரிவான பின்னணி வேண்டுமா?சிங்கப்பூரில் நடைபெற்ற பள்ளி கணித தேர்வில் முதலில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.செரிலின் பிறந்தநாள் எப்போது? எனும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. செரிலுக்கு ஆல்பர்ட் மற்றும் பெர்னார்ட் எனும் இரண்டு நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களிடம் செரில் தனது பிறந்த நாளுக்கான பத்து தேதிகளை கொடுத்ததாகவும், இருவரிடம் தனித்தனியே பிறந்த மாதம் மற்றும் பிறந்த தேதியை தெரிவித்தாகவும் அந்த குறிப்புகள் அமைந்துள்ளன.இதன் பிறகு செரில் பிறந்த நாள் எனக்கு தெரியாது; ஆனால் பெர்னாடுக்கும் தெரியாது என்று ஆப்லர்ட் முதலில் சொல்கிறார். பெர்னாட்டோ முதலில் எனக்கு தெரியாது. ஆனால் இப்போது தெரியும் என்று சொல்ல உடனே ஆல்பர்ட், இப்போது எனக்கும் தெரியும் என்கிறார்.எனில், செரில் பிறந்த நாள் எப்போது? இப்படி அமைந்திருந்தது அந்த கணக்கு?இதற்கு எத்தனை மானவர்கள் சரியாக விடை கண்டுபிடித்தனர், எத்தனை பேர் தவித்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த கணக்கை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டது. உடனே இந்த கணக்கு இணையவெளி முழுவதும் வைரலாக பரவி விவாத்ததை ஏற்படுத்தியது. கூடவே குழம்பவும் வைத்தது.இந்தக் கணக்கில் இருந்த புதிர் தன்மை பலரை கவர்ந்தது என்றால், இத்தனை கடினமான கேள்வியை பள்ளியில் கேட்கலாமா? என்ற கேள்வி இதன் மீதான கவனத்தை அதிகமாக்கியது.இதனிடையே இது பள்ளி தேர்வில் கேட்கப்பட்டதல்ல, மேல்நிலை மாணவர்களுக்கான கணித ஒலிம்பியாடில் கேட்கப்பட்டது என தெளிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்து பலரும் கேள்விக்கான பதில் தேடலில் ஈடுபட்டு குழம்பினர். அதே குழப்பத்துடன் இதை ஆன்லைனில் மேலும் பகிர்ந்துகொள்ள கணக்கு இணையத்தை வலம் வந்தது.இணையத்தை குழப்பும் பள்ளி கணக்கு என்னும் குறிப்பு மேலும் பலரை கவர்ந்தது. இப்படி தேடி வந்த பலரையும் இந்த கணக்கு தனது புதிர்த்தன்மையால் திகைக்க வைத்தது.இதற்கான பதில் பற்றியும் அதை கண்டுபிடிக்கும் வழி பற்றியும் பலவித கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே இன்னும் சிலரோ, இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்ல என்பது போல, செரில் பிறந்தநாளை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்த்தால் போச்சு என்பது போன்ற கருத்துக்களை கேலியாக பகிர்ந்து கொண்டனர்.இதுதான் இணையத்தை குழப்பும் கணக்கின் கதை.எல்லாம் சரி, செர்லின் பிறந்த நாளை கண்டுபிடித்துவிட்டீர்களா? விடைக்கான விளக்கம் தேவையா? இதோ: https://www.facebook.com/4sasmo/posts/983396811695295 * சைபர்சிம்மனின் வலைதளம் http://cybersimman.com/

தினம் தினம் மூன்று புது போன்கள்!

புதுப்புது ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனவே மொத்தம் எத்தனை போன்கள்தான் புதிதாக வந்திருக்கின்றன? ஒரு நாளைக்கு மட்டும் எத்தனை போன்கள் அறிமுகமாகின்றன? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் ஓடுகின்ற என்றால் ஸ்மார்ட் போன் சார்ந்த கேள்விகளுக்கு எல்லாம் கேட்ஜெட் ஆய்வு தளமான 91mobiles.com பதிலளிக்கிறது.

2013-ல் மட்டும் 957 போன்கள் அறிமுகமாகி உள்ளன. 2014-ல் இந்தியச் சந்தையில் 64 இந்திய பிராண்ட்கள் உள்ளிட்ட 95 பிராண்ட்கள் மொத்தம் 1,137 புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அதாவது தினமும் 3.1 செல்போன்கள் வெளியாகியுள்ளன.
இது 2013-ஐக் காட்டிலும் 19 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 215 போன்கள் வெளியாகியுள்ளன. விழாக்காலம் இனிமேல் தான் வர இருப்பதால் ஆண்டின் பிற்பகுதியில் இந்த எண்ணிக்கை கணிசமாகக் கூடும் என்கின்றனர்.
கடந்த ஆண்டு அறிமுகமான போன்களில் 5,000 முதல் 15,000 விலையிலான பட்ஜெட் போன்கள்தான் அதிகமாம். அது மட்டும் அல்ல, ஸ்மார்ட் போன்களின் சராசரி விலையும் 19 சதவீதம் குறைந்திருப்பதாகத் தகவல்.

அற்புதம் நிகழ்த்துமா ஆசிய மெஸஞ்சர் வேவீ


வேகாத வெயிலில் வெந்து தணியும் இளைஞர்களுக்கு கூலான செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது சிங்கப்பூர் நிறுவனமான சிங்டெல். அது வேவீ என்னும் அடுத்த தலைமுறைக்கான புது மெஸஞ்சர் ஒன்றை ஏப்ரல் ஏழாம் தேதி அன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.


இப்போது அநேக மெஸஞ்சர்கள் இளைஞர்களை இணைக்கப் பல வசதிகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் சிங்கப்பூர் அப்ளிகேஷன் புது அவதாரம் எடுத்துள்ளது.
ஏற்கனவே கையிலே ஒரு ஸ்மார்ட் ஃபோனை வைத்துக்கொண்டு வாட்ஸ் அப் வழியே இளைஞர்கள் பண்ணும் ரவுசு தாங்க முடியவில்லை என்று மூத்தவர்கள் சிலர் முணுமுணுக்கிறார்கள். இளைஞர்கள்னு மட்டும் சொல்ல முடியாது மூத்தவர்கள் சிலர்கூட அட்டகாசம் பண்ணுறாங்க. அடிக் குரலில் கிசுகிசுத்த உதவி ஆணையர் கதையை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்.
சாதாரணக் காலை வணக்கம் முதல் சூடான மிட் நைட் மசாலாவரை அனைத்துத் தகவல்களும் சுடச் சுட வந்துவிழுகின்றன வாட்ஸ் அப்பில். ஆளுக்கொரு குழு எனும் தனி ராஜ்ஜியம் அமைத்துத் தகவல்களைப் பரப்புகிறார்கள். உங்களுக்கு எது தேவையோ அதைப் பொறுத்து நீங்கள் ஒரு குழுவில் இணைந்துகொள்ளலாம். வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம். தனியே போகும் ஆணும் பெண்ணும் தானாச் சிரிக்கிறாங்க, கெக்கே பிக்கேன்னு நடந்துக்கறாங்க… காரணம் வாட்ஸ் அப்பில் வந்து சேரும் செய்திகள். அவை அவர்களின் புறச் சூழலை மறக்கடித்து ஓர் ஏகாந்தத்துக்குள் கொண்டு தள்ளிவிடுகின்றன.
வாட்ஸ் அப் போலவே ரஷ்ய சகோதரர்கள் உருவாக்கிய டெலிகிராம் எனவும் ஒரு அப்ளிகேஷன் புழக்கத்தில் உள்ளது. ஆனால் நம்மிடையே வாட்ஸ் அப் பெற்ற மகத்துவத்துக்குப் பக்கத்திலேயே வர முடியவில்லை டெலிகிராமால். இவ்வளவுக்கும் வாட்ஸ் அப் ஓராண்டு மட்டுமே இலவசம் ஆனால் டெலிகிராம் முழுக்க முழுக்க இலவசம். இந்தியாவில் இப்போதைக்கு வாட்ஸ் அப் முழு இலவசமாகத் தான் உள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்குக் கட்டணம் விதிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இப்போதைக்கு வாட்ஸ் அப் மாயத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள் நம் கோடிக்கணக்கான இளைஞர்கள்.
இந்நிலையில் இவையிரண்டையும் இதைப் போல ஏனைய மெஸஞ்சர்களையும் ஒருகை பார்க்கும் உத்தேசத்தில் சிங்கப்பூரின் சிங்டெல் டெலிகாம் நிறுவனம் வேவீயைக் கொண்டுவந்துள்ளது. இதுவும் இலவச அப்ளிகேஷன்தான். ஆப்பிள் ஸ்டோரிலும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இப்போதைக்கு இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது வாட்ஸ் அப்பைப் போலவே தகவல்களையும் ஒளிப் படங்களையும் வீடியோக்களையும் ஆடியோக்களையும் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
வாய்ஸ் கால் வசதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுஞ்செய்தியை அனுப்ப இயலும். உயர்தர வீடியோ கால் வசதியும் உள்ளது. படங்களையும், ஆசிய கலாச்சாரத்துக்கேற்ற முறையில் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்களையும் பரிமாறிக்கொள்ளலாம். உங்களுக்கு வரையும் திறமை இருந்து, நண்பர்களைக் கலாய்க்க விரும்பினால் வேடிக்கையான படம் வரைந்து நண்பர்களைக் கலாய்க்கலாம். கலாய்க்க கசக்குமா நமக்கு? கலாய்க்கனும்னா கலர்ஃபுல்லா வருவோமே?
மேலும் ஸ்மார்ட் போனில் உள்ள அத்தனை மெஸேஜ்களையும் ஒருங்கிணைத்து இந்த வேவீ மெஸஞ்சர் இன்பாக்ஸில் வைத்துப் பராமரிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் தொலைபேசிகளை அழைக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவும் வகையில் தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக சிங்டெல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தென்கிழக்காசிய நாட்டு நிறுவனம் ஒன்று இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. அமெரிக்க, ரஷ்ய அப்ளிகேஷன்களை இந்த ஆசிய அப்ளிகேஷன் ஓரங்கட்டுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

2G, E , 3G , 4G பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.


நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.

இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.

இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.

இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.

இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்

இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.

இதன் வேகம் மிகவும் அதிகம்.

இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.

இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இணையத்தில் சமவாய்ப்பு: குரல் கொடுக்கும் நெட்டிசன்கள்


நெட்நியூட்ராலிட்டி விவகாரத் தில் ப்ளிப்கார்ட் நிறுவனம் தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. அது அந்தர்பல்டியாக இருந்தாலும் நெட்டிசன்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஆனால் இதையும்கூட ‘’உலக நடிப்புடா சாமீ’’ என்கிறார்கள் நெட்டிசன்கள். ஏனென்றால் ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் முதலில் சேர்ந்ததே பிளிப்கார்ட்தான்.


மவுஸ் புரட்சியாளர்கள் கடுமையாக எதிர்ப்பை காட்டிவந்தாலும் ஏர்டெல் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது என்று இப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
நெட் நியூட்ராலிட்டி என்கிற சொற் களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர் களுக்கு தெரியாது. ஆனால் சிலியில் 2010-லேயே இதற்காக போராடி சட்டமெல்லாம் கொண்டு வந்து விட்டார்கள். அமெரிக்கா கூட இதில் தாமதம்தான். சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி ஒரளவு சுமுகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது தான் தொடங்கியிருக்கிறது இந்த பார பட்சமற்ற இணையத்திற்கான போர்!
இன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணைய தளங்களையும் சமூக வலைதளங் களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணைய தளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவது மில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.

நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணைய தளத்திற்கு மட்டும் சலுகை விலையில் சூப்பர் ஸ்பீடு! வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக் கட்டணம். வைபருக்கு தனிக் கட்டணம் என இப்படி நீட்டிக் கொண்டே செல்வார்கள். டிடிஹெச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே தந்திரத்தை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
அப்படி நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும், பாரபட்சமின்றியும் இருக்காது. நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய திட்டத்தை வெளியிட்டது. இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் ஒரு நிறுவனத்தின் ஆப்ஸை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக் காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும். இதனால் வாடிக்கையாளரான நமக்கு லாபம்தான். டேட்டாவும் மிச்சமாகும்.
உதாரணமாக பிளிப்கார்ட் இணையதளத்தை அல்லது செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே இலவசம்தான். இலவசம் என்றதும் நமக்கு கொண்டாட்ட மாகத்தான் இருக்கும். இதுக்கு ஏன் எதிர்ப்பு என்றும் நினைக்கலாம்.
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனமும் சில இனையதளங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இதற்கு இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு கூட்டு அமைத்தது. ரிலையன்ஸ் வாடிக்கை யாளர்களுக்கு இன்டெர்நெட் ஓஆர்ஜி மூலம் பேஸ்புக் உள்ளிட்ட சில இணைய தளங்களை இதன்மூலம் இலவசமாக பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட அறிவிப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இலவச மாக எந்த ஒன்றையும் எந்த நிறு வனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக் கொடுத்து விடாது.
இதில் என்ன சூது? என்கிறீர் களா இப்படி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங் களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்க தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள்! நிபந் தனைக்கு உட்பட்ட இப்படியான * # ஆபர்கள் நாம் அறியாததா என்ன?
அதாவது இட்லி இலவசம் ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்கு தனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.
ஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்துள்ளது. ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டின் வருமானத்தை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது நெருக்கடியை கொடுத்து வருகிறது.
மேலும் ஸ்கைப், வைபர் முதலான சேவைகளின் வழி பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கை களை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய்க்கு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.
‘கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42 சதவீதத்தையும், செல் போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19 சதவீதத்தையும் இழந்துள்ளன. இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24 ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலை தொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா? செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players, ஸ்கைப், வாட்ஸ் அப், வைபர் மாதிரியானவை)
இப்படிப்பட்ட நிலையில் கஷ்ட ஜீவிதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இந்த இணைய சுதந்திரத்தை எப்படி யாவது காலி பண்ணிவிட துடிக்கின்றன.

தடுக்க என்ன செய்யலாம்?
டெலிகாம் நிறுவனங்களை கட்டுப் படுத்தும் அமைப்பான டிராய் (TRAI) இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஆர்வ மாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதை படித்து உங்கள் கருத்துகளை டிராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ரா லிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத் தால்தான் ஏதாவது செய்ய முடியும்.
இணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் டிராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஓர் இணைய தளத்தை தொடங்கியுள்ளார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும்? எப்படி பதில் போட முடியும். அதனால் http://www.savetheinternet.in என்கிற இணைய தளத்துக்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் டிராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்த மாக டைப் செய்து வைத்திருக் கிறார்கள். அதை காப்பி பேஸ்ட் பண்ணி டிராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான். இதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள்.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு
இணைய சமஉரிமைக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இணையதளத்தின் இன்றைய பயன்பாடு ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரையும் குறிப்பாக இளைஞர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. யாருக்கு என்ன தேவை என்பதை யாராலும் முடிவு செய்ய முடியாது. ஒரு மனிதரை குறிப்பிட்ட மொபைல் செயலியைத்தான் (அப்ளிகேஷன்) பன்படுத்த வேண்டும் என நிர்பந்திக்க முடியாது.
எனவே, இணையதளப் பயன்பாடு பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்கும்படி மாற்றம் செய்யப்பட வேண்டும். இணைய சம உரிமைக் கொள்கையில் மிகுந்த நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன்.

இந்தியாவிலுள்ள எந்தவொரு குடிமகனும் சமமான அளவில் முழு வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதை டிராய் உறுதி செய்ய வேண்டும்.இணைய சமவாய்ப்பை அசைத்துப் பார்க்கும் முயற்சி வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Create Download Button Link


இந்தியாவில் ஜியோனி புதிய போன்

ஜியோனி நிறுவனம் ஸ்லிம் போன்களுக்குப் பெயர்பெற்றது. இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான எலைஃப் எஸ்7 மாதிரியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோனியின் எலைஃப் எஸ்5.5 மற்றும் எலைஃப் எஸ்5.1, ஆகிய மாதிரிகளின் தொடர்ச்சியான இந்த மாதிரி பார்சிலோனா மொபைல் கண்காட்சியில் அறிமுகமானது. இப்போது இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போன் 5.5 மி.மி. தடிமன் கொண்டது. 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளத்துடன் வந்துள்ளது. 13 மெபி பின்பக்க காமிரா மற்றும் 8 மெபி முன் பக்க காமிராக்களைக் கொண்டிருக்கிறது. 2ஜி,3ஜி, 4ஜி என எல்லா வசதிகளும் இருக்கின்றன. இதன் விலை ரூ.24,999.
நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய இருக்கும் எலைஃப் இ8 ஜூன் மாத வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எலைஃபி இ7 அறிமுகம் செய்யப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு இது அறிமுகமாக உள்ளது. இது வெறும் மேம்படுத்தப்பட்ட மாதிரியாக இல்லாமல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என ஜியோனி தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜியோனி இந்தியாவிலேயே தனது போன்களை உற்பத்திசெய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் குழுவையும் விரிவாக்க உள்ளது.

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி...!


கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம்.
உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும்.
ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்ட் பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தரவிறக்கம் செய்தவுடன் வாட்ஸ் ஆப் அல்லது மற்ற மெசேஜிங் அப்ளிக்கேஷன்களில் விரலால் எழுதி அனுப்பும் கீ பேடை செயல்படுத்த முடியும்.
எழுத்துக்களை ஸடைலஸ் எனப்படும் எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும்.