அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்...!

Puthiya Tholilnutpam
பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று (வியாழக்கிழமை) சுமார் அரைமணி நேரங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முடங்கியது.
ஃபேஸ்புக் தளத்தில் சர்வர் முடங்கியதாக தெரிகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.
ஃபேஸ்புக் தளம் பிற்பகலில் முடங்கிய அடுத்த நொடிகளில், அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர்.
#facebookdown என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் வலம்வரத் தொடங்கியது.
பின்னர், சுமார் அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக் வழக்கம்போல் இயக்கத் தொடங்கியது.
ஆசிய நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் முழுவதுமே இந்த முடக்கம் ஏற்பட்டது.
இதற்கு முன் இப்படி ஓர் அனுபவத்தை பெறவில்லை என்ற ரீதியில் ட்விட்டரில் ஃபேஸ்புக் பயனர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 160 பில்லியன் டாலர் என்பது கவனத்துக்குரியது.


Thanks ; The Hindu

மொபைல் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை 2018-ல் 52 கோடியாக உயரும்: மார்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை தகவல்...!

Puthiya Tholilnutpam
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் அதன் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் செல்போன் மூலமாக இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 25% அதிகரித்து வருவதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 52 கோடியாக உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு தொடர்பான அறிக்கையில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் 2016-ம் நிதி ஆண்டில் செல்போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33 கோடியாக உயரும் என தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து குறைந்துவருவதால் இதை உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் விரைவான அலைக்கற்றை சேவை, ஆன்லைன் சேவை ஆகியனவும் இதை உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகும்.
2018-ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 சதவீத வளர்ச்சியை எட்டும். இதன் மூலம் 21 கோடியாக உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 51.90 கோடியாக உயரும் என்றும் சராசரியாக ஒரு நபர் நுகர்வு 750 எம்பி அளவுக்கு இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அளவானது ஆசியாவின் சராசரி அளவாகும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை 200 டாலரிலிருந்து 50 டாலராகக் குறைந்துவிட்டது என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) உள்ள புள்ளிவிவரப்படி
2013-ம் ஆண்டு செப்டம்பர் வரை இன்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை 21 கோடியாகும். இதில் 90 சதவீதம்பேர் செல்போன் மூலம் பயன்படுத்துவோராவர். அதாவது 18.80 கோடி பேர் செல்போன் மூலமாகவும், 70 லட்சம் பேர் குறுகிய அலைக்கற்றை மூலமாகவும் (256 கேபிபிஎஸ்) பயன்படுத்துகின்றனர். 1.5 கோடி பேர் பிராட்பேன்ட் வாடிக்கையாளராவர். டேட்டா கார்ட் மூலமான வளர்ச்சி அடுத்த கட்டத்தில் அதிகமாக இருக்கும் என்றும் இப்போது 10 சதவீதமாக உள்ள வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 23 சதவீத அளவுக்கு உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 3ஜி அலைக்கற்றையில் 2ஜிபி விலை ரூ. 750 ஆக இருந்தது. இப்போது விலை ரூ. 450 ஆகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டண விகிதத்தைக் காட்டிலும் இந்திய நிறுவனங்கள் வசூலிக்கும் தொகை மிகக் குறைவாக உள்ளதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவிக்கிறது. வாட்ஸ் அப், ஸ்கைப் ஆகிய வற்றை உபயோகிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Thanks ; The Hindu

மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்...!

Puthiya Tholilnutpam
ஒரு விடுமுறை தினத்தை நண்பர்களுடன் கழிக்க வேண்டிய சூழல். நண்பர்களுடன் அடர்ந்த காட்டுக்குள் போகிறீர்கள். கையில் எப்போதும் போல் மொபைலுடன்தான் செல்கிறீர்கள். அவ்வப்போது வனத்தின் அழகான காட்சிகளைப் படம் பிடித்து பேஸ்புக்கில் அப்டேட் செய்கிறீர்கள். அந்த அடர்ந்த வனத்தில் மின் இணைப்பு கிடையாது. அனைவரது மொபைல்களிலும் பேட்டரி சார்ஜ் குறைந்துகொண்டே வருகிறது. எல்லோரையும் பதற்றம் பற்றுகிறது. வனத்தில் ஏராளமான மரங்களின் சுள்ளிகள் பரவிக் கிடக்கின்றன. இந்தச் சுள்ளிகளை எரித்து அந்த வெப்பத்தில் மொபைலை சார்ஜ் செய்ய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றும்தானே. அந்தக் கற்பனையே களிப்பைத் தருகிறதே, அது நிஜமானால்?
வியப்பில் வாய் பிளக்காதீர். வெறும் சுள்ளிகளால் நெருப்பை மூட்டி அதன் மூலம் மொபைலை சார்ஜ் ஏற்றவும் தேநீர் தயாரிக்கவும் உதவும் வகையில் பயோலைட் கேம்ப்ஸ்டவ் ஒன்று தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்டவ்வில் இரண்டு அறைகள் உள்ளன. ஓர் அறையில் சுள்ளிகளைப் போட்டு எரிக்கலாம்; அந்த அறையின் மீது பாத்திரத்தை வைத்துச் சூடேற்றலாம். ஒரு லிட்டர் தண்ணீரை நான்கைந்து நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். ஆகவே தேவையான தேநீரைத் தயாரித்துக்கொள்ளலாம். அடுத்த அறையில் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மொபைலுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்த வாகாக பிளக் பாயிண்ட் தரப்பட்டுள்ளது. 5 வோல்ட் மின்சாரத்தை இது உற்பத்தி செய்யும். மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொள்ள இது போதும். இதன் விலை சுமார் 130 அமெரிக்க டாலர்.
இந்த ஸ்டவ்வை மிக எளிதாக எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த இயலும். பயன்படுத்தி முடித்த பின்னர், சுள்ளிகளால் ஏற்பட்ட சாம்பலை சிறிய குழி தோண்டி கொட்டி தண்ணீர் ஊற்றித் தணலை அணைத்துவிட்டால் போதும், வேலை முடிந்துவிடும். மண்ணோடு மண்ணாக மட்கிவிடும், சுற்றுச் சூழலுக்கு எந்தக் கேடும் விளைவிக்காது.

Thanks : The Hindu

பெண்களை இழிவுபடுத்தும் தளமா" ட்விட்டர்"...?

Puthiya Tholilnutpam
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது.
இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர்.
"பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தனர்.
பெரும்பாலான ட்வீட்களில் பெண்கள் எப்படி ஏமாற்றுபவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள் என்றும், நம்பதகுந்தவர்களை எப்படி நண்பர்கள் வட்டத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் புலம்பி தள்ளியிருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் விமர்சனத்திற்கு ஆளாகிறார்கள்.
சமீபத்தில் லாவண்யா மோகன் என்ற இளம்பெண் ஆதார் அட்டை வாங்க சென்றுள்ளார். ஆனால், துப்பாட்டா அணியாத காரணத்தால், பணியாளர்களோ லாவண்யாவுக்கு ஆதார் அட்டை வழங்க மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, லாவண்யா ட்வீட் செய்ய, மேலே குறிப்பிட்டுள்ள ஹஷ்டேக் பிரபலமடைந்துள்ளது.
"நான் ட்வீட் செய்த பின், அதற்கு எதிராக மிக மோசமான ட்வீட்களை சிலர் பதிவு செய்தனர். நான் என்னையே விளம்பரப்படுத்துவதாக சிலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அதனால், நான் சுயதணிக்கை செய்தாக வேண்டியிருந்தது.
ட்வீட்டரில் தொடர்ந்து இயங்கி வரும் ஆண்களை இயல்பாக கருதுவது போல் பெண்களை கருதுவதில்லை. சமூக வலைதளங்களில் பெண்களை எளிதாக இழிவுபடுத்திவிடுகிறார்கள். இதற்கு சுயதணிக்கை செய்வது தகுந்த தீர்வல்ல என்றாலும், என் மன அமைதிக்காக நான் அதை செய்ய வேண்டியிருந்தது" என்று அவர் வருத்ததுடன் தெரிவித்தார்.
இதற்கு முன், கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடகி சின்மயியை ட்விட்டரில் இழிவுபடுத்தியதாக இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர். சாதி வெறி மற்றும் அபாச ட்வீட்களால் சின்மயி தாக்கப்பட்டார்.
எழுத்தாளர் மீனா கந்தசாமி தன்னை இழிவுபடுத்தும் வகையில் பல ட்வீட்கள் தனக்கு வந்ததாக முன்பு கூறியுள்ளார். ஆசிட் வீச்சு செய்வதாகவும், பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கூட மிரட்டல்கள் வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
ட்விட்டருக்கு நெறிமுறைகள் வழங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்பதற்கு, இல்லை என்கிறார் ப்ராஜ்ன்யா என்ற அமைப்பைச் சேர்ந்த அனுபமா ஸ்ரீனிவாசன். இந்த அமைப்பு, பாலியல் மற்றும் பாலினம் தொடர்பான வன்முறைகளை எதிர்த்து செயல்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து அனுபமா கூறுகையில், "ஒரு வகையில் இணையத்தில் இயங்குவதும், சாலையில் நடப்பதும் ஒன்றே. சிலர் தான் என்ன நினைக்கிறார்களோ அதை செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதற்கு தீர்வாக, இதுபோன்ற சம்பவங்கள் அறிந்தவுடன், இதனை மிக முக்கிய விஷயமாக எடுத்துக்கொண்டு தீர விசாரிப்பதே சிறந்தது" என்று தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்வுகளையும், உங்களுடைய ஆன்லைன் அனுபவத்தையும் வைத்தும் பார்க்கும்போது, பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்? - விவாதிப்போம் வாருங்கள்.


Thanks : The Hindu

'உணர்வுப்பூர்வமானவர்களின் தெரிவு பெரிய திரை ஸ்மார்ட் போன்களே"...!

Puthiya Tholilnutpam
பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏனென்றால், அது அவர்களை உணர்வுபூர்வமாக திருப்திப்படுத்துவதால்தான்!
தொலைத்தொடர்பு தேவைகளுக்காகவும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் மக்கள் பெரிய திரைக்கொண்டவற்றை தேர்ந்தெடுப்பது அவர்களை உணர்வப்பூர்வமாக திருப்திபடுத்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்து பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷ்யாம் சுந்தர் கூறுகையில், “பெரிய திரைக்கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் வாங்க முன்வருவதற்கான காரணங்கள் பெரும்பாலும் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே இருப்பதாக எங்கள் கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது," என்று தெரிவித்தார்.
அடிப்படையில், இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எளிதாக பயன்படுத்தக்கூடியது, மற்றொன்று உணர்வுப்பூர்வமாக திருப்தியடைவது.
“ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் பலவிதமான பயன்கள் உண்டு. ஆனால், கண்கவரும் பெரிய திரைக்கொண்ட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுவது பயனீட்டாளர்கள் மிகுந்த திருப்தியடைவதுதான் இதன் சிறப்பு,” என்று கூறுகிறார் பேராசிரியர் சுந்தர்.
சந்தையில் தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களின் திரையளவு பெரிதுப்படுத்தி இருக்கிறார்கள்.
“முன்பிருந்த ஸ்மார்ட் போன்களைவிட தொலைக்காட்சி, திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவான பெரிய திரைக்கொண்ட போன்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறுகிறார் சுந்தர்.
இந்த ஆய்வின்போது, 130 பல்கலைகழக மாணவர்வகளிடம் இரு வெவ்வேறு அளவுடைய ஸ்மார்ட் போன்களை கொடுத்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
பெரிய திரைக்கொண்ட தொலைக்காட்சிகளும் கம்பியூட்டர் திரைகளும் பயனீட்டாளர்கள் மத்தியில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது கைப்பேசிகளுக்கும் பொருந்தும் என்று எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது,” என்று கொரியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி ஜூன் கிம் கூறுகிறார்.


Thanks ; The Hindu

குளிர்பானம் தரும் குதூகல ரோபோ...!

Puthiya Tholilnutpam
நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது கருவி உருவாக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. எல்லையற்று விரிகிறது தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி. அதன் ஒரு பகுதியாக இண்டெல் நிறுவனம் புதிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜிம்மி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி ரோபோவின் பாகங்கள் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்த ரோபோ பேசும், நடக்கும் ஏன் விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தைக்கூடக் கொண்டுபோய்க் கொடுக்கும்.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஜிம்மி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பளீர் வெள்ளை நிறத்தில் நுகர்வோர் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கைக்கு அடக்கமாக உள்ளது. இதன் உயரம் 2 அடி மட்டுமே. தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட ஜிம்மி பார்வையாளர்களைப் பார்த்துக் கையசைத்துள்ளது.ஜிம்மியிடம் நமக்குத் தேவையான விதத்தில் புரோக்ராம் கொடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பாடுவது, மொழிமாற்றம் செய்வது, ட்வீட் அனுப்புவது போன்ற செயல்களைச் செய்வதற்கான புரோக்ராமை அதில் உள்ளீடு செய்தால் போதும். அது அத்தனை வேலைகளையும் பார்க்கும்.
இண்டெல் நிறுவனத்தில் தலைமை அதிகாரி பிரைன் கிர்ஸானிச் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற கருவிகளின் உருவாக்கத்தில் தனது தொழில்நுட்பத் திறமையைக் காட்டிவிட்டு இப்போது ரோபோ பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இந்த ரோபோ இந்தாண்டின் கடைசியில் நுகர்வோரின் கைக்குக் கிடைக்கலாம் என இண்டெல் நிறுவனம் கூறுகிறது. ரோபோவை வாங்கும் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான செயல்களைச் செய்யும்படியான புரோகிராம்களை உள்ளீடு செய்துகொள்ளலாம். இந்த புரோக்ராம்களை டவுன்லோடு செய்துகொள்ளும் அப்ளிகேஷனாகப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
தொடக்கத்தில் இந்த ரோபோவின் விலை 1,600 அமெரிக்க டாலராக இருக்கும். ஆனால் ஐந்தாண்டுகளில் அதன் விலை ஆயிரம் டாலராகக் குறைய வாய்ப்பு உள்ளது என இண்டெல் தெரிவித்துள்ளது. ஆக இப்போதைக்கு இதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய்.


Thanks ; The Hindu

ஏசர் ஐகானிக் டேப் 8...!

Puthiya Tholilnutpam
ஏசர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஏசர் ஐகானிக் டேப் 8 எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த டேப்லெட் ஜூலையிலிருந்து சந்தையில் புழக்கத்தில் விடப்படும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் விலை குறித்து நிறுவனம் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த டேப்லெட் போக ஏசர் லிக்யுட் இ 700, ஏசர் லிக்யுட் இ 600, ஏசர் லிக்யுட் இஸட் 200, ஏசர் லிக்யுட் எக்ஸ் 1, ஏசர் லிக்யுட் ஜேடு ஆகிய ஐந்து ஸ்மார்ட்போன்களையும் ஏசர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏசர் ஐகானிக் டேப் 8 ஆண்ட்ராய்டு 4.4 தொழில்நுட்பத்தில் செயல்படும். மிகச் சமீபத்திய ஆண்ட்ராய்டு வகை இது. 8 அங்குலத்தில் எச்டி தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஐபிஎஸ் டிஸ்ப்ளே துல்லியமான திரைக்கு உத்ரவாதமளிக்கிறது. ஜீரோ ஏர் கேப் தொழில்நுட்பத்தில் உருவான இந்த டேப்லெட் குறைவான ஆற்றலில் விரைவாகச் செயல்படும் குணாதிசயம் கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள். இதன் தொடுதிரையைத் தொடுதலின் மூலம் உடனடியாக உயிர்ப்பிக்க முடியும். அதற்கான நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டை 2 ஜிபி ராமுடன் இணைந்த இண்டெல் ஆட்டம் இஸட் 3745 க்வாட்கோர் புராஸஸர் இயக்குகிறது. பேனலின் பின்பக்கத்தில் 5 எம்பி லென்ஸும் முன்பக்கத்தில் 2 எம்பி லென்ஸும் கொண்ட கேமராக்கள் இதில் உள்ளன. டேப்லெட்டின் சேமிப்புத் திறன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு உதவியுடன் இந்தச் சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். வைஃபை, ப்ளூடூத் மைக்ரோ யூஎஸ்பி போன்ற தொழில்நுட்பங்கள் தகவல்களைப் பெறவும் பரிமாறவும் உதவுகின்றன.
8.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இந்த டேப்லெட்டின் எடை வெறும் 360 கிராம். இப்போதைக்கு இந்த டேப்லெட் அமெரிக்கச் சந்தைகளில் கிடைக்க வாய்ப்பில்லை, எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மாறலாம்.


Thanks ; The Hindu

ட்விட்டர் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா...!

Puthiya tholilnutpam
ட்விட்டரை அதிகம் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருமாறும் என்று இ-மார்கெட்டர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக இருக்கும் என்று கூறி இருக்கிறது.
மேலும் இந்த வருட இறுதிக்குள் ட்விட்டர் பயன்படுத்துபவர்களில் ஆசிய பசிபிக் பகுதியில் 32.8 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் 23.7 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்தான் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
இந்த வருட இறுதியில் ட்விட்டர் பயன்பாட்டில் இந்தியா மூன்றாவது இடம் பிடிப்பதுபோல இந்தோனேஷியா 1.53 கோடி வாடிக்கையாளர்களுடன் நான்காவது இடத்தை பிடிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை இந்த இரண்டு நாடுகளும் பின்னுக்குதள்ளும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
2018-ம் ஆண்டு வட அமெரிக்காவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட ஆசியா பசிபிக் பகுதியில் இரண்டு மடங்கு பயன்படுத்துவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தமாக 2014-ம் ஆண்டு ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 24.4 சதவீதம் அதிகரித்து 22.75 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது. கடந்த வருடம் 18.29 கோடிபேர் ட்விட்டர் பயன்படுத்தினார்கள்.
2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்திருக்கிறது.


Thanks ; The Hindu

கடிகாரத்திலும் பேசலாம்...!

Puthiya Tholilnutpam
கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் மணி பார்க்கலாம் என்பது பழைய செய்தியாகப் போகிறது. கடிகாரத்தையே மொபைல் போனாக உபயோகிக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. தென்கொரிய நிறுவனமான சாம்சங் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிவருகிறது. சாம்சங் நிறுவனம் தனது கடிகாரத்தை ஸ்மார்ட் போனாக்கத் துடிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சை மொபைல் போனாக்குவது தொடர்பாக பல தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இந்நிறுவனம். இந்த வாட்ச்-போனை வரும் ஜூன் அல்லது ஜூலையில் சந்தையில் புழக்கத்தில்விட சாம்சங் நிறுவனம் முயன்றுவருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் மொபைல் புழங்கிய பின்னர் வாட்ச் அணியும் வழக்கம் குறைவது போல் தோன்றியது. இந்த வாட்ச்-போன் சந்தையில் வரத் தொடங்கிய பின்னர் அந்தக் குறை ஒருவேளை நீங்கிவிடலாம்.


Thanks ; the hindu

வாழ்வை எளிதாக்கும் அப்ளிகேஷன்கள்...!

Puthiya tholilnutpam

மொபைல் நிறுவனங்கள் புதிது புதிதாக அநேக அப்ளிகேஷன்களை மொபைல் போன்களில் இணைத்து நுகர்வோரைத் தங்கள் வசமாக்க முயல்கின்றன. மொபைல்களிலேயே பணப்பரிமாற்றம் செய்ய, ரயில், பேருந்துகள் டிக்கெட் எடுக்க எனப் பல வசதிகள் வந்தன. வீடியோ கேம்கள், புகைப்படம், இசை போன்ற பல வசதிகளை ஸ்மார்ட் போன்கள் உள்ளடக்கி உள்ளன. ஆனால் இந்தத் தேவைகள் நீண்டுகொண்டே போவதால் மொபைல் நிறுவனங்களும் புதுப் புது அப்ளிகேஷன்களை உருவாக்குகின்றன. தனி நபர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அப்ளிகேஷன்களுக்குப் பரவலான வரவேற்பு உள்ளது.

சீம்லெஸ் (Seamless)
உணவுப் பிரியர்களுக்கு அவசியமான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது. உணவுக்கான சிரமத்தைத் துடைத்தெறிகிறது இந்த அப்ளிகேஷன். இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த ரெஸ்டாரெண்டின் பிரசித்தி பெற்ற உணவு வகையை ஆர்டர் செய்து கொள்ள முடியும். விரல்களால் ஆர்டர் செய்தால் அடுத்த அரை மணி நேரத்தில் சுடச்சுட உணவு உங்கள் முன் தயாராக இருக்கும்.

ஊபெர் (Uber)
தனிமையில் எங்கோ மாட்டிக் கொண்டீர்கள். உங்களை விடுவிக்கும் அப்ளிகேஷன் இது. விரல்களின் மூலம் கால் டாக்ஸியை இந்த அப்ளிகேஷன் வரவழைக்கும். வரும் காரில் ஏறி நிம்மதியாக நீங்கள் விரும்பும் இடத்திற்குப் போய்ச் சேரலாம்.
இவை உதாரணங்கள் மட்டுமே. இவற்றைப் போன்றே பல அப்ளிகேஷன்கள் எதிர்வரும் நாட்களில் ஸ்மார்ட்போன்களில் நுழையப் போகின்றன. இப்போதே சில நாடுகளில் புழங்கத் தொடங்கியுள்ளன. இவை இந்தியாவிலும் விரைவில் வந்துவிடும்.

Thanks ; The Hindu

உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம் கருத்துகள்...!


Puthiya Tholilnutpam

          'ஹைப்ரிட் ஏர்' நிறுவனம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டனில் பறக்க வைத்துக் காட்டிய ஒரு விமானம், உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. 'ஹெச்ஏவி 304' என்ற இந்த விமானம், உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஒரு விமானம், ஒரு ஹெலிகாப்டர், ஒரு ஏர்ஷிப் ஆகிய மூன்றையும் இணைத்த கலவை போல இது இருக்கிறது.

                 * உலகின் நீளமான விமானம் இதுதான். இதன் நீளம் 302 அடி. இப்போதைய நீளமான பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 (239.5 அடி), சரக்கு விமானமான அனடோனோவ் ஏஎன்225 (276 அடி) ஆகியவற்றைவிட நீளமானது. இதன் உயரம் 85 அடி. அகலம் 143 அடி.

               * இது வானத்தில் எழுவதற்கு நீளமான ரன்வே தேவையில்லை. ஒரு ஹெலிகாப்டரைப் போல அப்படியே மேலெழும்பும் திறன் படைத்தது.

              * மற்ற விமானங்களைப் போல இது அதிக எரிபொருளைத் தீர்க்காது. ஹீலியம் நிரப்பப்பட்ட ஒரு பலூன் போல இது மிதப்பதால், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும். இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், மக்களை மீட்கவும், போர்க்கால கண்காணிப்புக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

            * இருபது டன் சரக்குகளை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் திறனுள்ளது என்பதால், பெரிய தளவாடங்களை அவசரமாக கண்டம் விட்டு கண்டம் எடுத்துச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம்.

          * இவ்வளவு பெரிதாக இருந்தாலும், இது உயரத்திலும் பறக்கும்; வேகமாகவும் செல்லும். தரை மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது இது.

       * இதன் அடுத்த கட்டமாக 'ஏர்லேண்டர் 50' என்ற விமானத்தை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இது 50 டன் சரக்குகளை கையாளும் திறன் படைத்ததாம்.


-Thanks ;  http://book.dinakaran.com/

Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலையில் அறிமுகம்...!

Puthiya Tholilnutpam
Xiaomi நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போனான Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை ரூ.14,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ள்து. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனை தவிர ஒரு சார்ஜர் மற்றும் USB கேபிள் அடங்கும் ஒரு மிக எளிய பெட்டியில் வருகிறது. மேலும், இது இயர்ஃபோன் கொண்டு வரவில்லை. அலுமினிய மெக்னீசியம் அலாய் ஃப்ரேம் பூசப்பட்ட 3 லேயர்களை கொண்ட தெர்மல் கிராஃபைட் இணைக்கப்பட்ட நல்ல தரமான பிளாஸ்டிக் பேக் பேனல் கொண்டுள்ளது. ஒற்றை சிம் போன் வழக்கமான அளவிலான சிம் அட்டைகள் ஆதரிக்கிறது.

Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் உலோக சாம்பல் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த போனில் மூன்று கலர் டெம்பரேச்சர் மோட்கள் (வார்ம், ஸ்டாண்டர்ட் மற்றும் கூல்) மற்றும் இரண்டு சசுரேஷன் (ப்ரில்லியன்ட் மற்றும் ஸ்டாண்டர்டு) ஆகியவற்றை வழங்குகிறது. தீம் அப்ளிக்கேஷன்களான, பல்வேறு தொகுப்பு கொண்ட ஐகான்கள், வால்பேப்பர்கள், அப்ளிக்கேஷன் ஸ்விட்சர், ஃபான்ட் ஸ்டைல், சாவுண்ட்ஸ், லாக் ஸ்கிரீன் ஸ்டைல் மற்றும் சிஸ்டம் அப்ளிக்கேஷன் போன்ற இலவச தீம்கள் வழங்குகிறது.

Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் Adreno 330 ஜி.பீ.யூ மற்றும் நான்கு க்ரைத் 400 CPU கோர்களை கொண்ட 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC இயங்கும். திரையில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே உள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

மேலும், ரேம் 2GB, 16GB உள்ளடங்கிய சேமிப்பு, 3050mAh பேட்டரி, NFC, Wi-Fi, b / g / n / AC, ப்ளூடூத் 4.0 மற்றும் எ-ஜிபிஎஸ் உடன் GLONASS ஆகியவை உள்ளடக்கியுள்ள்து. microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xiaomi Mi 3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 இயங்குகிறது.

Xiaomi Mi 3 ஸ்மார்ட்போன் விவரக் குறிப்புகள்:
  • 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் பேனல் டிஸ்ப்ளே,
  • Adreno 330 ஜி.பீ.யூ,
  • 2.3GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 800 SoC,
  • டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் Exmor யூனிட் கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • ரேம் 2GB,
  • microSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • NFC,
  • Wi-Fi b / g / n / AC,
  • ப்ளூடூத் 4.0,
  • எ-ஜிபிஎஸ் உடன் GLONASS,
  • ஆண்ட்ராய்டு 4.4.2,
  • 3050mAh பேட்டரி.


Thanks ;  http://book.dinakaran.com/

பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்...!

Puthiya Tholilnutpam
பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software
இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் 
மென்பொருட்கள் பற்றியும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்.


1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.


2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும். ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.


எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.


-----------------------------
Download Software
----------------------------

இப்பதிவை எழுதி அனுப்பியவர்:- Mohamed Siyam
அவர்களுக்கு நன்றி.



Thanks ; http://naveenamatram.blogspot.in/

கிறுக்கல் விழுந்த CDகளிலிருந்து தகவல்களை பெற மென்பொருள்...!

Puthiya Tholilnutpam

நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள்.


அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.

வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.

சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும்.



சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம். 

நீங்கள் இந்த (http://www.isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும்.

 அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும். 

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.


Thanks ; http://naveenamatram.blogspot.in/

அழித்த மொபைல் டேட்டா திரும்ப வேணுமா...!

Puthiya Tholilnutpam


தற்போது மொபைல் என்பது ஒரு குட்டி கம்பியூட்டர் போலவே இயங்க ஆரம்பித்து விட்டது எனலாம். போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே
ஸ்தம்பித்துவிடும் அல்லவா?

சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.

இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.


இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.



Thanks ; http://naveenamatram.blogspot.in/

உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி...?

Puthiya Tholilnutpam
அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம். 


இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை. ... 

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும். Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. 

இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. 

இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது. Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்....

இதை தரவிறக்கம் செய்ய





Thanks ; http://naveenamatram.blogspot.in/

முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம்...!

Puthiya Tholilnutpam
தென் கொரி­யா­வா­னது முழு­மை­யான திரைப்­ப­ட­மொன்றை ஒரு செக்­கனில் பதி­வி­றக்கம் செய்­யக்­கூ­டிய 5 ஆம் தலை­முறை கைய­டக்கத்தொலைபேசி இணை­யத்­தள சேவையை அறி­மு­கப்­ப­டுத்த தயா­ரா­கி­யுள்­ளது.
இதன் பிர­காரம் மேற்­படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலை­முறை கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களில் 900 மில்­லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முத­லீடு செய்­துள்­ளது.
 
இந்த சேவையை பரீட்­சார்த்­த­மாக 2017 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தவும் அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்­ப­ருக்குள் வர்த்­தக ரீதி­யாக செயற்­ப­டுத்­தவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
 
மேற்­படி தொழில்­நுட்­ப­மா­னது ஒரு செக்­கனில் 800 மெகா பைட் அள­வான திரைப்­பட கோப்பை பதி­வி­றக்கம் செய்­வ­தற்கு பயன்­பாட்­டா­ள­ருக்கு அனுமதிக்கிறது.
 
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.



Thanks ; http://naveenamatram.blogspot.in/

ஹிஜாப் அணிந்த பெண்ணின் மென்பொருளை வாங்க போட்டி போடும் கூகுள் (Google) மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் (Mocrosoft)..!

Puthiya Tholilnutpam
பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன சாதித்து விட்டார்?
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபூதபியில் வசித்து வரும் ஃபாத்திமா அல் ஜாபி எனும் பெண்மணிதாம் அவர்.
சிறிதளவு கம்ப்யூட்டர் அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்!
காப்பிரைட் ஒன்றின் மூலம் மட்டும் தினந்தோறும் மில்லியன்களில் சம்பாதிக்கும் AutoCAD போன்ற மென்பொருட்களை சாமான்யர்கள் பயன்படுத்த இயலாது. அதற்குரிய கல்வி கற்பதோடு முறையான பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
ஆனால், Microsoft PowerPoint மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஃபாத்திமா வடிவமைத்துள்ள மென்பொருள் நேர்மாறானது. எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியது.
சமீபத்தில் கல்ஃப் நியூஸ் நாளிதழிலிருந்து ஃபாத்திமாவைச் சந்தித்தனர். அதன் சாரம்சம்:
பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்தவேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்? இதற்கு எத்தனை காலம் பிடித்தது?
ஃபாத்திமா: “நான் அல் அய்னில் உள்ள அல் கவாரிஜ்மி சர்வதேசக் கல்லூரியில் இஞ்சினியரிங் கோர்ஸ் முடித்தேன். சிறந்ததொரு கட்டிடக் கலை பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. கட்டிடங்களை வடிவமைக்கத் தேவைப்படும் 2D அல்லது 3D டிசைன்களைப் பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டேன்.
இவற்றை வரையவும் கணக்கீடுகளைச் செய்யவும் ஆட்டோகேட் போன்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மேலும், எவரும் இதைப் பயன்படுத்தும் வண்ணம் எளிமையான மாற்றுவழி ஏதும் உண்டா என்று தேடினேன்.
இந்தத் தேடலில் ஏற்கெனவே அனைவருக்கும் பரிச்சயமான, எளிய மென்பொருளான MS பவர் பாயிண்ட்டை எடுத்துக் கொண்டு அதனை மேம்படுத்த ஆரம்பித்தேன். ஆறு வருட உழைப்பிற்குப் பிறகு, ஒரு கட்டிட வடிவமைப்பிற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கி விட்டேன்!”
பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவதில் ஏதும் சிரமங்களைச் சந்தித்தீர்களா?
ஃபாத்திமா: “சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் மிக எளிமையான முறையில் ஒரு கட்டிடத்தைத் தாமே சிறப்பாக வடிவமைக்கும் வகையில் ஒரு மென்பொருள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை என்னுள் இருந்தது. எனவே, பல பதிப்புகளை முதலில் உருவாக்கினேன். முன்னதை விடச் சிறந்ததாக அடுத்தடுத்த பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணம் இருந்தேன்.
தன்னுடைய வீட்டைத் தானே வடிவமைக்க வேண்டும் என்று விரும்பிய என்னுடைய தங்கை ஒருத்தி, என்னுடைய டிரையல் வெர்ஷன் பதிப்பைப் பயன்படுத்தித் திருப்தி அடைந்தாள். அன்று தான் என்னுடைய முயற்சி வெற்றியடைந்தது என உணர்ந்தேன்!”
உங்கள் ப்ராஜக்ட் நிறைவுற்றவுடன், அதற்குரிய அங்கீகாரமும் சந்தைப்படுத்தலும் எளிமையாக இருந்ததா?
ஃபாத்திமா: “இப்பணி நிறைவு பெற்ற சமயத்தில், இது தொடர்பாக என்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதில் நான் கண்டுபிடித்த டூல்ஸ்களைக் கொண்டு பவர்பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவது பற்றிய விரிவான ஆய்வை வெளியிட்டேன்.
ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்! மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.
தொடர்ச்சியாக, பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு என்னுடைய ப்ராஜக்ட் பற்றிப் பேசினேன். ஆனால், அவர்களில் எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அபூதபி மற்றும் துபையின் வர்த்தக சங்கத்தில் என்னுடைய ப்ராஜக்ட்டைப் பதிவு செய்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் வழிகாட்டலும் தாம் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன. என்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளி உலகிற்குப் பரவ ஆரம்பித்தது.
இப்போது, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்தில் கலந்துரையாடுவதற்கான அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றுள்ளேன். கூகுள் மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்கள் என்னுடைய மென்பொருளை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறீர்கள்; பயனுள்ள செயல்திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா?
ஃபாத்திமா: “அமெரிக்காவிற்குச் சென்ற கையோடு, அரபிப் பெண்கள் குறித்துப் பிறர் கொண்டுள்ள தவறான உருவகத்தைப் பற்றிப் பலரிடம் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளேன். “ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்! மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.”
உங்களுடைய பொழுதுபோக்கு?
ஃபாத்திமா: “கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி… அபூதபியில் உள்ள பெண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிற்கு கேப்டனாக உள்ளேன். கல்வி, விளையாட்டு போன்றவற்றில் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்துள்ள விடுதலை பற்றி மேற்குலகிற்கு எடுத்துக் கூறி, அவர்கள் புரிந்து வைத்துள்ள தவறான பார்வையை மாற்றுவேன்!”
நீங்கள் தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஆர்வம் கொண்டவரா?
ஃபாத்திமா: “ஆம்! சிறுவயது முதற்கொண்டே வீட்டிலுள்ள உடைந்த பொருட்களில் பழுது நீக்குவதில் ஆர்வமாக இருப்பேன். என்னுடைய சகோதரர்கள் கம்ப்யூட்டர்களைப் பழுதுபார்ப்பது பற்றிக் கற்றுத் தந்தனர். ஒரு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் சோம்பிப் போய் உட்கார்ந்து விடாமல், அதைத் தேடிப் பிடித்துப் படித்துத் தெரிந்து கொண்டு தான் ஓய்வேன். இறைவனின் நாட்டமும், என்னுடைய பழக்கமுமே என்னுடைய வெற்றிக்கான காரணமாக எண்ணுகிறேன்!”
********
உடைகளைக் களைந்து பொதுவெளியில் நிர்வாணமாக விரும்பியவாறு நடந்து செல்வதைத் தடுக்காத மேற்கத்திய நாட்டுச் சட்டங்கள், அதே நாட்டில் ஒரு பெண், தான் விரும்பும் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் போது தடுப்பதும் தடுமாறுவதும் விசித்திரம்!
ஹிஜாபிற்கான தடைகள் கொண்ட நாடுகளில் “Judge me by what’s in my head not what’s on my head! ” என்ற பதாகைகள் ஏந்திப் போராடும் பெண்களில் ஒருவராக நாம் சகோதரி ஃபாத்திமாவைப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் பெப்ரவரி 1 அன்று உலக ஹிஜாப் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஹிஜாப் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கண்ணியம், அணிவதில் உள்ள செளகரியங்கள், இறைவனின் பொருத்தத்தை அடையும் நன்மைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
சகோதரி ஃபாத்திமாவின் குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
இத்தகவலை வெளியிட்ட இணையதளம்..

Thanks ; http://naveenamatram.blogspot.in/