புத்துணர்ச்சி தரும் லாப்டாப் ஸ்கின்கள்...!

PUTHIYA THOLILNUTPAM
உடைகளிலும், சிகை அலங்காரங்களிலும் மட்டுமே டிரெண்ட் மாறிக்கொண்டே இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், இந்தக் காலத்து இளைஞர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அவர்களைப் பற்றி ஒரு கதையை சொல்கிறது.
வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட மடிக் கணினிகளையும் அலங்கரிக்க வந்துவிட்டது பல டிசைன்களில் லாப்டாப் ஸ்கின்கள்.
கல்லூரி மாணவ, மாணவியரிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த லாப்டாப் ஸ்கின்கள் பெரும்பாலாக ஆன்லைனில் போஸ்டர் கலி, ஃபிளிப்கார்ட், ஈபே போன்ற தளங்களில் 400 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. “எனக்கு அப்ஸ்டிராக்ட் டிசைன்களின் மேல் பெரிய ஈர்ப்பு உள்ளது.
ஆன்லைனில் பல டிசைன்கள் இருப்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிய நேரமே அதிகம். நாம் விருப்பப்பட்டு அணியும் ஆடைகளைப் போல, லாப்டாப் ஸ்கின்களையும் என் ஸ்டைலைக் குறிக்கும் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன்” என்கிறார் கல்லூரி மாணவி உமா மகேஸ்வரி.
போஸ்டர் கலி (Postergully)
இந்தியாவின் முதல் ஃபேன் ஸ்டோர் ‘போஸ்டர் கலி’. பல கலைஞர்கள் தங்கள் கலைப் பொருள் டிசைன்களை ‘போஸ்டர் கலி’ யின் மூலம் விற்பனை செய்யலாம். சுவரில் ஒட்டும் போஸ்டர்களிலிருந்து, புது வடிவங்களில் காபி மக்குகள், லாப்டாப் ஸ்கின்கள், மொபைல் போன் உறைகள் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.
இதுமட்டுமின்றி அவரவர்களுக்குப் பிடித்த பர்த்டே பார்ட்டி, திருமண நிகழ்ச்சி போன்ற மறக்க முடியாத தருணங்களின் புகைப்படத் தொகுப்பையும் லாப்டாப் ஸ்கின்களாக அச்சிட்டுத் தருகின்றன ‘பிரிண்ட் அவென்யூ’ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்.
லாப்டாப் ஸ்கின் இன்ஸ்பிரேஷன்
அழகான டிசைன்களைக் காட்டிலும் ஆழ்ந்த கருத்துகளை ரசிப்பவர்களுக்காக, உத்வேகத்தைத் தூண்டும் வகையில், இன்ஸ்பிரேஷன் கோட்ஸுடன் கூடிய உறைகள் பலவும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைகளைப் பார்க்கிறார் அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் திவ்யா.
“வண்ணமயமான ‘இன்ஸ்பையரிங் கோட்ஸ்’ கொண்ட லாப்டாப் ஸ்கின் எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமின்றி பெயிண்டிங் என்னுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று. எனக்குப் பிடித்தவாறு என்னுடைய லாப்டாப் ஸ்கின்னை நானே டிசைன் செய்து, பின்பு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கினேன். இது என்னை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டும் ஒரு பொருளாக நினைக்கிறேன்.
என் ஃப்ரெண்டுஸ் பலருக்கு, அவர்கள் என்னுடன் இருக்கும் புகைப்படங்களை லாப்டாப் ஸ்கின்னில் அச்சடித்து கிப்ட் செய்துள்ளேன்” என்கிறார் அவர்.
தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும் வண்ண வண்ண டிசைன்களைக் கொண்டுள்ளதைத் தாண்டி, இது போன்ற சிறிய பொருட்கள் சந்தோஷத்தைப் பகிர்வதற்கும் உதவுகின்றன. “அடிக்கடி உபயோகிக்கும் லாப்டாப் போன்ற ஒரு பொருளில் ஒட்டப்படுவதால்தான், இதை வாங்குவதில் நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.
என்னுடைய லாப்டாப் ஸ்கின்னில் ‘ஹாப்பினஸ் இஸ் எ சாய்ஸ்’ என்று எழுதி இருக்கும். ஒவ்வொரு முறை அதை பார்க்கும் போதும் எனக்குள் பூரிப்பு ஏற்படுகிறது” என்கிறார் கல்லூரி மாணவி அனுபமா.
காலத்திற்கு ஏற்றார் போல் தங்களுக்கான அடையாளங்களை அதிகக் கலையுணர்வுடனும், ரசனையுடனும் தேர்ந்தெடுக்கிறார்கள் இக்காலத்து இளைஞர்கள்.

THANKS ; THE HINDU

ஃபேஸ்புக் கார்னர்...!

PUTHIYA THOLILNUTPAM
ஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட் என்று தொடரும் விழிப்புணர்வு பக்கெட்டில் லேட்டஸ்டா புக் பக்கெட்டும் சேர்ந்துவிட்டது.
டாப் 10
எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் (கொசுறுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கொடுத்திருக்கிறேன்). இவை யாவும் உலக இலக்கியங்களென்க.
1. The Autumn of the Patriarch - கலைஞர் மு.கருணாநிதி
2. The Little Prince - டாக்டர் ச.ராமதாஸ்
3. Crime and Punishment - ஜெயலலிதாவுக்கும் கனிமொழிக்கும் இடையிலான சம்வாதம்
4. Being and Nothingness - விஜயகாந்த்
5.The Outsider- பெ. மணியரசன்
6. The Sound and the Fury - வைகோ
7. Divine Comedy - சுவாமி நித்தியானந்தர்
8. Things Fall Apart - பிரகாஷ் காரத்
9. ப்ளீஸ் இந்த டாக்டர்கிட்ட போகாதீங்க - நீயா நானா கோபிநாத்
10. முப்பது நூற்றாண்டுகளில் புரட்சி செய்வது எப்படி - தொகுப்பு வினவு.காம்
11. ஒன் டெர்ராபைட் மஹாபாரத்ஹம் - ஜெயமோகன்
12. கத்திய சோதனை - சீமான்
13. The Lonely Planet Guides - எஸ். ராமகிருஷ்ணன்
14. தாய் - கூட்டுநாவல் தமிழ்த் தேசியர்கள்

ஃப்ரண்டா, லவ்வரா? சொல்லும் ஆப்ஸ்...!

Puthiya Tholilnutpam
ரக ரகமான ஸ்மார்ட் போன்கள் போலவே அதற்கென உருவாக்கப்படும் ஆப்ஸும் செம ஸ்மார்ட். புதுப் புது மொபைல் ஆப்ஸை டவுன்லோட் செய்து மாடர்ன் ஆளா காட்டிக்கிட எல்லோருக்குமே ஆசை. ஃபோர் ட்வெண்டி டாட் காம் என்னும் இணையதளத்தில் யூத்ஃபுல்லான ஸ்மார்ட் போன் ஆப்ஸ் கொட்டிக்கிடக்கின்றன.
எல்லாமே ஃப்ரீதான். இந்த வெப்சைட்டில் அதிக அளவில் டவுன்லோடு செய்யப்படும் சில ஆப்ஸைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள் என்றால் அவற்றை டவுன்லோடு செய்துவிட்டுத் தான் வேறு வேலை பார்ப்பீர்கள்?
நாட் ரீச்சபிள் அப்ளிகேஷன்
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன் இது. இதன் ஸ்பெஷாலிட்டிதான் இந்த அப்ளிகேஷன் விரைவாகப் பரவக் காரணம். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, ஆன் செய்து வைத்துக்கொண்டால் போதும் உங்களது போனுக்கு யார் ட்ரை பண்ணினாலும் ‘த கஸ்டமர் இஸ் நாட் ரீச்சபிள் அட் த மொமண்ட்’ என்பதே திரும்பத் திரும்ப ஒலிக்கும்.
காலேஜ் கட் அடிச்சிட்டுப் படத்துக்குப் போனாலோ, ஃப்ரண்ட்ஸோட ஊர் சுத்தினாலோ இந்த அப்ளிகேஷனை ஆன் செய்து வைத்துக்கொண்டால் போதும் நீங்க எங்க இருக்கீங்கன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. எந்த விதத் தொந்தரவும் இல்லாம நீங்க ஜாலியா டைம் பாஸ் பண்ணலாம்.
ஃபோட்டோ ஹைடிங் அப்ளிகேஷன்
யங்ஸ்டர்ஸின் ஒட்டுமொத்த ஆதரவு இதற்கு இருக்கிறது. இது உங்கள் பாய்ஃப்ரண்ட்டுடன் அல்லது கேர்ள்ஃப்ரண்டுடன் நீங்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபிய ரகசியமாப் பாதுகாக்க ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இந்த அப்ளிகேஷன ஆன் பண்ணி வச்சிட்டாப் போதும் உங்கள் மொபைலில் உள்ள எந்த ஃபோட்டோவையும் யாரும் பார்க்க முடியாது. காலரியே எம்ப்ட்டின்னு காட்டும். அதனால க்ளோஸ் ஃப்ரண்ட்ஸுங்கிற பேரில் உங்கள் மொபைல நோட்டம் போடுபவர்களிடமிருந்து உங்கள் ரகசியத்தைக் காப்பாற்றும் அப்ளிகேஷன் இது.
காதலிப்பவர்களுக்கான ஸ்பெஷல் அப்ளிகேஷன் இதுவென இந்த இணையதளம் இதை புரோமேட் செய்கிறது.
கிரேட் எஸ்கேப் அப்ளிகேஷன்
சரியான மொக்கை கேஸுகளிடம் மாட்டிக்கொண்டு தப்பித்துக்கொள்ள வழி தெரியாமல் பல சந்தர்ப்பங்களில் தலையைப் பிய்த்துக் கொள்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். ஆப்ஸ் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். கிரேட்
எஸ்கேப் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள். மொக்கை கேஸ்கள் பேசத் தொடங்கும்போது இந்த அப்ளிகேஷனை
ஆன் செய்துவிடுங்கள். சரியாக 30 விநாடிகளில் தொடர்ந்து உங்கள் செல்ஃபோனுக்கு இன் கம்மிங் கால் வந்துகொண்டேயிருக்கும். போன்
வருதுன்னு சொல்லி நீங்க ஈஸியா எஸ்கேப் ஆகிடலாம். பிறகென்ன மொக்கைகளிடமிருந்து தப்பிக்க இந்த அப்ளிகேஷனை லேட் பண்ணாமல் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷன் காலேஜ் ஸ்டூடண்ஸைவிட ஆபீஸ்கோயர்களிடம் செம பாப்புலராம்.
143 அப்ளிகேஷன்
உங்க ஹார்ட்பீட்ட எப்போதும் நார்மல்சிக்கு கொண்டுவராத ஒரு விஷயம், சிரிச்சி சிரிச்சு பேசுற பையனோ பெண்ணோ ஃப்ரண்டா அல்லது லவ்வராங்கிறது. இந்த ப்ராப்ளத்தை ஈஸியாத் தீர்த்துவச்சிரும் இந்த அப்ளிகேஷன்.
இதன் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கணும்னு டெல்லியில் பெற்றோர்கள் முறையிடுற அளவுக்கு பெற்றோர்கள் வயித்தில் அமிலத்தையே கரைக்கிற அப்ளிகேஷன் இது.
ஆனால் இளவட்டங்களின் இதயத்தை அப்படியே கபளீகரம் செய்த அப்ளிகேஷனும் இதுதான். இந்த அப்ளிகேஷன் உங்களோட காதல் பிரச்சினையத் தீர்க்கும் டாக்டர்னே சொல்லலாம்.
இதை முதலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அந்த நபரின் மொபைல் நம்பர் கண்டிப்பாக உங்களிடம் இருக்கும். இல்லையென்றாலும் அதை வாங்கி ஸ்மார்ட் ஃபோனில் ஸ்டோர் பண்ணிக்கங்க.
இப்ப அப்ளிகேஷனை ஆன் பண்ணி அதில் உங்க ஆளோட மொபைல் நம்பர் என்கேஜ் பண்ணிக்கங்க. இதைத் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாகப் பதில் சொல்லுங்க. அதனடிப் படையில் அப்ளிகேஷன், உங்க ஆளு உங்கள் ஃப்ரண்டா நினைக்கிறாங்களா லவ்வரா நினைக்கிறாங்களாங்கிறதைச் சொல்லிரும்.
அமெரிக்கக் கல்லூரிகளில் இந்த அப்ளிகேஷன் உதவியால் தங்கள் லவ்வரைக் கண்டறிந்துள்ளதாக மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக உட்டோபியா யுனிவர்சிடியின் பேராசிரியர் மிஸ்டர் ஃப்ராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மறந்துராதீங்க.
இந்த அப்ளிகேஷன்கள் உங்களுக்குப் பிடித்துள்ளதா? இதை கூகுள் ஸ்டோரிலோ நோக்கியா ஸ்டோரிலோ தேடினால் கிடைக்காது. ஃபோர் ட்வெண்டி டாட் காமில் மட்டுமே கிடைக்கும். அந்த இணையதளத்தில் பக்கத்திற்குச் சென்று, தேவையான அப்ளிகேஷனை க்ளிக் பண்ணுங்க.
அதில் ஸ்லோகன் எனத் தெரியும் விண்டோவைத் திறந்து, ஆசை, தோசை, அப்பளம், வடை என்னும் மந்திரத்தை ஆயிரம் முறை டைப் செய்துவிட்டு கடைசியாக உங்கள் மொபைல் எண்ணை அதில் டைப் பண்ணுங்க. அவ்வளவுதான், இப்போ உங்க மொபைலில் அந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். ஓகேவா?

THANKS ; THE HINDU

இளம்பெண்களின் செல்போன் மோகம் ஏன்...?


ஆண்களைவிடப் பெண்கள் அதிகமான நேரத்தை செல்போனுடன் செலவழிக்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. கல்லூரி மாணவிகள் ஒரு நாளில் சராசரியாகப் பத்து மணி நேரத்தைத் தங்கள் செல்போனில் செலவிடுகிறார்கள். இதுவே, மாணவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் பெய்லர் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் அறுபது சதவீத மாணவர்கள் தங்களுக்கு செல்போன் அடிக் ஷன் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு குறித்துச் சில மாணவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஆர். வர்ஷினி, இரண்டாம் ஆண்டு, பி.எஸ்சி, 
விஸ்காம், கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை.
என் வாழ்க்கையோட ஒரு பகுதியாக நான் மொபைலை நினைக்கிறேன். என்னுடன் பிறந்த தங்கையோ, தம்பியோ மாதிரிதான் என் மொபைலை நினைக்கிறேன். என் அம்மா, அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். நான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மொபைல் தான் பெரும்பாலான நேரங்களில் எனக்கு கம்பெனி கொடுக்கும்.
அதோடு, மொபைல் இருப்பதால்தான் தனியாக வீட்டில் இருக்கும்போது பெற்றோர், நண்பர்கள், கஸின்கள் என நெருங்கியவர்களிடம் தொடர்பில் இருக்க முடிகிறது.
பெண்களுக்கான ஒரு பாதுகாப்பு கருவியாக மொபைல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பெண்கள் அதிகமாக அதைப் பயன்படுத்துவதற்கான காரணம், இதுவரை அவர்களுக்குக் கிடைக்காத ஒரு சுதந்திரம் ஸ்மார்ட் போன் மூலம் கிடைப்பதாக நினைக்கிறார்கள்.
வி.எஸ். சிவபிரசாந்த், இரண்டாம் ஆண்டு, பி.ஏ. ஆங்கிலம், 
தூய தாமஸ் கல்லூரி, சென்னை
என்னைப் பொறுத்த வரை யாராக இருந்தாலும் செல்போனை அதிகநேரம் பயன்படுத்துவது ஆபத்துதான். எல்லாரிடமும் இப்போது ஸ்மார்ட் போன் இருக்கிறது.
ஸ்மார்ட் போன் வந்த பிறகு இளைஞர்களிடம் விளையாட்டில் இருக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. பெரும்பாலும் அவர்களுடைய விளையாட்டும் மொபைலி லேயே சுருங்கி விடுகிறது.
என். ஐஸ்வர்யா, பி. டெக்., அம்ருதா பொறியியல் கல்லூரி, 
கோவை
நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதைப் பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனுடன் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கேன்டி க்ரஷ் போன்ற கேம்ஸ், போட்டோ எடிட்டிங், சோஷியல் மீடியா எனப் பல விஷயங்கள் எங்களை ஸ்மார்ட் போனுடன் அதிக நேரத்தை செலவிடவைக்கிறது.
கூச்ச சுபாவம் உடையவர்கள்கூட டெக்ஸ்டிங் செய்வதால் எளிமையாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் அதே சமயம், அவர்கள் ஒருவித மாய உலகத்திலேயே வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதில் நிறைய ஆபத்தும் இருக்கவே செய்கிறது.
ஜெ. அசாருதீன், மூன்றாம் ஆண்டு, 
எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், 
எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, சென்னை
இன்று பெரும்பாலான இளைஞர்களிடம் செல்போன் அடிக் ஷன் காணப்படுகிறது. இதில் ஆண், பெண் விதிவிலக்கல்ல. அதிகமான நபர்களுடன் நட்பு பாராட்ட நினைப்பதாலேயே பெண்கள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துகிறார்கள்.
ஆண்களுக்கு ஸ்மார்ட் போன் தவிர பிளே ஸ்டேஷன் போன்ற நிறைய பொழுதுபோக்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பெண்கள் ஸ்மார்ட் போனை மட்டுமே பிரதானமான பொழுதுபோக்கு அம்சமாக நினைக்கிறார்கள். அதனால்தான் பெண்கள் நிறைய நேரம் செல்போனுடன் கழிக்கிறார்கள்.

THANKS ; THE HINDU

ஸ்மார்ட்வாட்ச்: மோட்டரோலா அறிமுகம்...!

Puthiya Tholilnutpam
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் வெள்ளிக்கிழமை இரண்டாம் தலைமுறை மோட் டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் மாடல் செல்போன்களை அறிமுகம் செய்தது. இந்த தயாரிப்புகள் ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும்.
சில மாதங்களுக்கு முன்பு மோட்டோ ஜி, மோட்டோ இ, மோட்டோ எக்ஸ் மாடல் செல்போன்களை பிளிப்கார்ட் மூலம் மோட்டரோலா விற்பனை செய்தது. இந்தியாவில் இந்த மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட ரகங்களை அறிமுகப் படுத்துவதாக மோட்டரோலா நிறுவன பொதுமேலாளர் அமித் போனி தெரிவித்தார்.
மோட்டோ ஜி மாடல் செல் போனை பிளிப்கார்ட் மூலம் பெறலாம். இதன் விலை ரூ. 12,999 ஆகும். இது 16 ஜிபி நினைவகத் திறன் உடையது. மோட்டோ எக்ஸ் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் ஆகியன இம்மாத இறுதியில் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அமித் மேலும் தெரிவித்தார்.

Thanks ; The Hindu

Your name and message sent on our current mission opportunity, OSIRIS-REx, is one of many Messages from Earth that have been sent on missions throughout our solar system…!

Be a part of space exploration

Starting with the launch of Cassini, The Planetary Society has created opportunities for people to participate in planetary missions by sending their names, messages, images, and wishes aboard spacecraft.  

The next message is leaving on: OSIRIS-REx

NASA’s OSIRIS-REx mission and The Planetary Society invite people worldwide to fly their names on a round-trip ride to the target of the OSIRIS-REx mission, the asteroid Bennu. Names will launch in 2016, spend over 2 years at Bennu, and return to Earth in the Sample Return Capsule in 2023. A copy of the names will also be placed on the spacecraft, which will remain in space long after the sample return capsule is back on Earth.

Your name and message sent on our current mission opportunity, OSIRIS-REx, is one of many Messages from Earth that have been sent on missions throughout our solar system…
This amazing combination of technology and the human spirit will chronicle humanity throughout the universe.
Messages from Earth is made possible by our collaboration with the space agencies around the world who make these amazing missions happen!

நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி...!

ரத்த அணுக்களோடு டாக்டர் நானோபாட்கள்
Puthiya Tholilnutpam
நானோ தொழில்நுட்பம் என்ற புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஒரு பெரும் சுனாமி போலத் தயாராகி வருகிறது.
ரிச்சர்டு ஃபெயின்மான்
நானோ தொழில்நுட்பம் பற்றி முதலில் பேசியவராக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்டு ஃபெயின்மான் கருதப்படுகிறார்.அவர் 1959 டிசம்பர் 29- ல் “There's Plenty of Room at the Bottom,” (கீழே ஏராளமாக இடம் உள்ளது) என்ற தலைப்பில் ஒரு உரையாற்றினார்.
அதுவே நானோ தொழில்நுட்பம் பற்றிய முதல் உரையாகக் கருதப்படுகிறது. அதில் அவர் “அணுக்களை மாற்றி அமைத்து அவற்றில் நாம் தலையிடுவதன் மூலம் புதிய வகையான பொருள்களை உருவாக்கலாம். அதே தொழில்நுட்பத்திலேயே சின்ன இயந்திரங்களை உருவாக்கி, அவற்றின் மூலமே அணுக்களை மாற்றியமைத்து அந்தப்பணியையும் யந்திரமயமாக்கலாம்.
எதிர்காலத்தில் டாக்டர்களை நாம் விழுங்குவோம். அறுவை சிகிச்சை செய்ய சின்ன ரோபாட்களை நமது உடலுக்கு உள்ளே அனுப்புவோம். பொருள்கள் சின்னதாக மாறுவதால் புவியீர்ப்பு விசை செயலிழந்து போகும் நிலை வரலாம். வேறு சில விசைகளும் வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறும்” என்றார்.
அவரது கருத்துக்களின் விளைவாக இன்று அணுக்களை ஆராயும் மிக நுண்ணிய நவீன கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் விஞ்ஞானி பேராசிரியர் நொரியோ தனிகுச்சிதான் நானோ தொழில் நுட்பம் என்ற சொல்லை 1974- ல் முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். 1980 களில் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவராலும் இந்தக் கருத்து மேலும் வளர்க்கப்பட்டது.
நானோ என்றால் ….
ஒரு மீட்டரை 100 கோடிப் பகுதிகளாகப் பிரித்தால் அதில் ஒரு பகுதிதான் நானோ மீட்டர். மனிதரின் ஒரு தலைமுடியின் தடிமன் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் நானோ மீட்டர். சிகரெட் புகையின் ஒரு சின்னத்துணுக்கை அளந்தார்கள். அது 10 நானோமீட்டர்கள் அளவில் இருந்துள்ளது.
வெறும் கண்களால் பார்க்க முடியாத அணுக்களில் ஒரு 8 முதல் 10 - ஐ எடுத்து நானோ மீட்டர் ஸ்கேலில் உட்காரவைத்தால் அவை ஒரு நானோ மீட்டர் நீளத்துக்கு இருக்கும். 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளில் சின்னதாக பொருள்களைத் தயாரிப்பதும், அப்படிச் சின்னதாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் வீரியமானதாகவும் இருக்குமாறும் செய்வதே நானோ தொழில்நுட்பம்.
பல்துறைத் தாக்கம்
இது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம். ஆகையால் நானோ தொழில்நுட்பங்கள் என்று பன்மையிலும் அழைக்கலாம். நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை. உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பலதுறைகளில் தாக்கம் செலுத்திவருகி்றது.
வரையறை
1 முதல் 100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அவற்றின் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புதுப் பயன்பாடுகளுக்கு வழி வகுப்பது என்று நானோ தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் நேஷனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் நிறுவனம் வரையறை செய்கிறது. நானோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் கார்பன் என்கிற கரிதான்.
கரி, நிலக்கரி, வைரம் என கார்பன் பல வடிவங்களில் இருக்கிறது. அதேபோல கார்பனில் இருந்து புளோரின் எனும் கரி வடிவம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதைக்கொண்டு சில நானோ கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி தற்போது நடைபெறுகிறது. இது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் என்பதால் ஆராய்ச்சிகள் மிக ரகசியமாக நடைபெறுகின்றன.

Thanks : The Hindu

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி...!

Puthiya Tholilnutpam
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.
தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.

Thanks ; The Hindu

தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கலாம்...!

Puthiya Tholilnutpam
உங்கள் நண்பருக்கோ, காதலிக்கோ நீங்கள தவறாக அனுப்பிய குறுஞ்செய்தியைப் பற்றி இனி கவலைப்படவேண்டாம். அவர்கள் அதைப் படிக்கும் முன்னரே அழித்துவிடும் புது செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"இன்விஸிபிள் டெக்ஸ்ட்" (“Invisible Text”) எனும் இந்த செயலி, பயனர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை, பெறுபவர் படிக்கும் முன்னரே அழித்துவிடும் வசதியைக் கொண்டுள்ளது. இதில் ஒரே சிக்கல், செயலி அழிக்கும் வரை, அந்த குறுஞ்செய்தி படிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
இதே போல, வீடியோ மற்றும் குரல் பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பிவிட்டு, அவை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பெறுநர்களின் மொபைலில் இருக்குமாறு நேரத்தை நிர்ணயிக்கும் டைமர் வசதியும் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செயலி அல்லவா! கூடவே ஒரு முக்கிய தகவல்: உங்கள் குறுஞ்செய்தி மற்றும் படங்களை பெறுபவரது மொபைலிலும், "இன்விஸிபிள் டெக்ஸ்ட்" செயலி இருந்தால்தான் இந்த அம்சம் வேலை செய்யும்.

Thanks ; The Hindu

கேட்ஜட் உலகம்...!

PUTHIYA THOLILNUTPAM
நாம் இணையமயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். இதன் மையமாக ஸ்மார்ட் போன்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன.
ஸ்மார்ட் போன் கவலை
இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. அதென்ன ஸ்மார்ட் போன் கவலை என்று கேட்கிறீர்களா? எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை.
இழப்பு என்றால் விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல; அதைவிட போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். இதைத் தான் ஸ்மார்ட் போன் தொலைவதால் ஏற்படும் கவலை (smartphone-loss anxiety disorder) என்கின்றனர்.
கனடாவின் ஆண்டாரியோவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தி, ஸ்மார்ட் போன் தொலைய வாய்ப்பில்லை என்னும் மிதப்பில் இருப்பவர்கள் இந்தக் கவலையால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதிப்புகளை மீறி ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் போன் தொலைந்தால் அதில் உள்ள தகவல்களைப் பாதுக்காக்கத் தேவையான வழிகள் பற்றி அறியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். போனில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்து வைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தகவல்கள் மறைந்து போகச்செய்யும் டைம்பாம் வழி, தொலைவில் இருந்து லாக் செய்வது என இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
உங்கள் ஸ்மார்ட் போன் தொலையாமலே இருக்கட்டும். ஆனால், அதில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளை அறிந்து வைத்திருங்கள் தவறில்லை!
சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டில் பெரியவர்களைவிடப் பிள்ளைகள் கில்லாடிகளாக இருக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட் போன்கள் சிறுவர்களிடம் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்போதும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் டிவி என டிஜிட்டல் சாதனங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் முக உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனை மெல்ல இழந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. நேருக்கு நேர் பழகும் மற்றும் உரையாடும் வாய்ப்பு குறைவதால் இந்தப் பாதிப்பு என்று லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நடத்திய இந்த ஆய்வில், ஸ்மார்ட் போன்களை அவர்களிடமிருந்து வாங்கிவிட்டால் பிள்ளைகளிடம் மற்றவர்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
என்ன செய்ய, இவை நம் காலத்து பாதிப்புகள்!
பயர்பாக்ஸ் போன்
எதிர்பார்க்கப்பட்டது போலவே பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகி இருக்கிறது. இண்டெக்ஸ் நிறுவனம் கிலவுட் எப்.எக்ஸ் (Intex Cloud FX ) எனும் பெயரில் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. விலை. ரூ.1,990. மின் வணிக தளமான ஸ்னேப்டீல் மூலம் இது விற்கப்பட உள்ளது. இதே போல மற்றொரு பயர்பாக்ஸ் போனை (Spice Fire One Mi-FX 1 ) ஸ்பைஸ் நிறுவனம் ரூ.2299 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நிலையில் சாதாரண செல்போன் விலையில் பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன் அறிமுமாகி இருக்கிறது. 2 மெகாபிக்சல் காமிரா, 3.5 இன்ச் திரை, 128 எம்பி ராம் என இதன் அம்சங்கள் சாதாரணமாக இருந்தாலும் முதல் முறையாக ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இதன் விலை ஏற்றதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்று சொல்லப்படும் பயர்பாக்ஸ் போனில் கவனிக்க வேண்டிய அம்சம் அதன் பிரத்யேக இயங்குதளமான பயர்பாக்ஸ் ஓ.எஸ் ஆகும்.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தும் மொபைல் ஓஎஸ் உலகில் பயர்பாக்ஸ் ஓஎஸ் புதிய வரவு மட்டும் அல்ல, முழுக்க முழுக்க இணையம் மற்றும் எச்.டி.எம்.எல் 5 சார்ந்ததாகும். இதில் வாட்ஸ் அப் கிடையாது. அதற்குப் பதில் கனெக்ட்ஏ2 எனும் ஆப்ஸ் உள்ளது. பயர்பாக்ஸ் போன் எந்த வகையான வரவேற்பைப் பெற்று எந்த வகையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது எனப் பார்க்கலாம்.
ஐஸ் பக்கெட் சவால்
இணைய உலகின் இப்போதைய ட்ரென்ட் ஐஸ் பக்கெட் சவால். ஏ.எல்.எஸ். அமைப்பிற்காக நிதி திரட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் புதுமையான சவால் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பிரபலங்கள் முதல் ஃபேஸ்புக் பயனாளிகள் வரை லட்சக்கணக்கானோரைக் கவர்ந்துள்ளது. இதன்படி தலையில் சில்லென்று தண்ணீரை ஊற்றிக்கொண்டு அதே போல தண்ணீர் ஊற்றிக்கொள்ள மூன்று பேரைச் சவாலுக்கு அழைக்க வேண்டும். அவர்கள் சவாலை ஏற்க வேண்டும், அல்லது நிதி அளிக்க வேண்டும். பெரும்பாலும் எல்லோரும் சவாலையும் ஏற்று நிதியும் அளித்துவருகின்றனர்.
இதனிடையே சாம்சங் காலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போனும் ஐஸ் பக்கெட் சவாலில் குதித்துள்ளது. இது தொடர்பான வீடியோவில் சாம்சங் காலெக்ஸி போன் ஐஸ் தண்ணியில் குளித்து, ஐபோன், நோக்கியா மற்றும் எச்டிஎஸ் ஆகிய வற்றைச் சவாலுக்கு அழைத்துள்ளது. நோக்கியா மற்றும் எச்டிஎஸ் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளன.
நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியை இப்படி விளம்பர நோக்கில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கும் விமர்சனத்திற்கும் சாம்சங் இலக்காகியுள்ளது.
செல்ஃபீ போன்கள்
ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பலருக்கு செல்ஃபி மிகப் பிடித்த விஷயம்தான். செல்ஃபியை எடுத்துத் தள்ள என்றே தனியே ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகத் தொடங்கியிருக்கின்றன. சோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பிரியா சி3 (Xperia C3 Dual ) ஸ்மார்ட் போன் செல்ஃபிகளுக்கு ஏற்ற போனாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்சல் முன் பக்க காமிரா மற்றும் 25 மிமி வைடு ஆங்கிள் லென்ஸ் 80 டிகிரி தோற்றத்தைத் தரக்கூடியது. ஏற்கனவே அறிமுகமான சிங்கிள் சிம் மாதிரியுடன் இப்போது டபுள் சிம் மாதிரி வந்துள்ளது. விரைவில் இது சந்தையில் கிடைக்கும் .
இதே போல லாவா நிறுவனமும் தனது எக்ஸ் வரிசை போன்கள் செல்ஃபீ போன்களாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. முன் பக்க காமிரா, பிளாஷ் மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸ் என செல்ஃபீ அம்சங்கள் இதிலும் இருக்கின்றன.
ஆப்ஸ் உலகம்
ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆப்ஸ் பற்றி சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் போன் ஆப்ஸில் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் முன்னணியில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் யூடியூபுக்கான அப்ளிகேஷன் உள்ளது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் பயனாளிகளில் பலரும் புதிய அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்வதில்லை என்று இன்னொரு தகவல் சொல்கிறது.
இதனிடையே பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ் அப், 600 மில்லியன் தீவிரப் பயனாளிகளின் எண்ணிக்கையைத் தொட்டிருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 மில்லியனைத் தொட்டுள்ளது. மொபைல் இயங்கு தளங்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 18,000 க்கும் மேற்பட்ட வகையான சாதனங்களில் செயல்படுவதாக ஓபன் சிக்னல் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆப்ஸ் பற்றி சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் போன் ஆப்ஸில் ஃபேஸ்புக் அப்ளிகேஷன் முன்னணியில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தில் யூடியூபுக்கான அப்ளிகேஷன் உள்ளது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன் பயனாளிகளில் பலரும் புதிய அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்வதில்லை என்று இன்னொரு தகவல் சொல்கிறது.
இதனிடையே பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ் அப், 600 மில்லியன் தீவிரப் பயனாளிகளின் எண்ணிக்கையைத் தொட்டிருப்பதாகத் தெரிவித் துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 மில்லியனைத் தொட்டுள்ளது. மொபைல் இயங்கு தளங்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 18,000 க்கும் மேற்பட்ட வகையான சாதனங்களில் செயல்படுவதாக ஓபன் சிக்னல் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

THANKS ; THE HINDU

தி ப்ளஃபிங்டன் போஸ்ட்: சுமார் மூஞ்சி குமார கைது பண்ணிட்டாங்கோ...!

PUTHIYA THOLILNUTPAM
உக்கார்ந்த இடத்துல கையக் கட்டிகிட்டு, எவ்வளவு நாள்தான் “வட்டாரங்கள மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது”ன்னு சொல்லிட்டு இருக்கிறது. கொஞ்சம் அப்டி இப்டின்னு நியூஸ் கேட்டாத்தானே மாஸ்! ராவல் பிண்டி எக்ஸ்பிரஸைக் கோலிக் குண்டு ஆட வைக்கணும். அமெரிக்க ஒபாமாவை ஆண்டிபட்டி திருவிழாவுக்குக் கூட்டிவந்து மஞ்சத் தண்ணீ ஊத்தச் செய்யணும். பரவை முனியம்மாவை பாலிவுட் ஹீரோயினா ஆக்கணும். இந்தியாவோட கேப்பிட்டலா உங்க சொந்த ஊர மாத்தணும். நம்மூர் எலந்தப் பழச் செடில செர்ரி முளைக்கணும். எக்ஸாமே அட்டன் பண்ணாம நீங்க யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட்னு முதல் பக்கத்துல நியூஸ் வரணும். இதெல்லா எப்டிமான்னு கேட்குறீங்களா? அதுக்குத்தான் இருக்கு ‘ஃபேக் நியூஸ்’.
சும்மா, வெறுப்பேத்துற ‘சுமார் மூஞ்சி குமார்களை’ ஜெயில்ல போடணுமா, ‘உனக்கு லக் இருக்கு. ஆனா இல்லை’ன்னு பிடிக்காத ஃப்ரண்ட்ஸுக்குப் பல்புகளைக் கொடுக்கணுமா, மேக்ஸ் புரபசர்களைப் புயல்ல சிக்கவைக்கணுமா? இது மாதிரி செமையான உங்க ‘ஆங்க்ரிஸ்’ எல்லாத்தையும் இந்த ஃபேக் நியூஸ்ல போட்டுத் தீர்த்துக்கலாம். அது மாதிரி சுரேஷ் ரெய்னா செஞ்சுரி அடிச்சு பேட்-அப் பண்றப்ப, நாமளும் ஒரு நாள் இப்படிப் பண்ணணும்னு புல்லரிக்கும். அதையும் பண்ணிரலாம். இந்த ஃபேக் நியூஸ்தான் இப்ப ஃபேஸ்-புக், ட்விட்டர்ல எல்லாம் பாப்புலர். செம த்ரில்லாவும் இருக்கும்.
இத க்ரியேட் பண்ண நிறைய வெப் சைட் இருக்கு. யார் பேர்ல நியூஸ் வரணும்மோ அவுங்க எந்த ஏரியாங்கிறத முதல்ல டைப் பண்ணிட்டு ஒரு க்ளிக் பண்ண, அடுத்து கம்யூட்டர் ஸ்கிரீன்ல வந்திரும், “சுமார் மூஞ்சிக் குமார கைது பண்ணிட்டாங்கோ”. அத ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஷேர் பண்ணலாம். தமிழ்லயே நியூஸ் வருமானு கேட்குறீங்களா, நெவர். பீட்டர்லதான் வரும். ஆனா ஃப்ரீயா விடு. அதுக்கும் ஒரு சைட் சீக்கிரம் வந்திரும். இப்போதைக்கு இந்த சைட்ல http://www.noob.co.in/ ஃபேக் நியூஸ் க்ரியேட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.

THANKS ; THE HINDU

ப்ளுடூத் பூட்டு...!

PUTHIYA THOLILNUTPAM
இங்கதான் வச்சிருந்தேன் எங்க போச்சுன்னே தெரியல என்னும் புலம்பலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பல் அது. ஏனெனில் பூட்டைப் பூட்டி சாவியை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம். சாவி தொலைத்து சங்கப்படக் கூடாது என்பதற்காக சில நம்பர் பூட்டுகளும் வந்தன.
ஆனால் நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும் ஆனால் சாவியும் இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஈடேறாத ஆசை. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. பூட்டலாம் ஆனால் சாவி வேண்டியதில்லை. சாவி இல்லாமலே திறக்கலாம். கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இந்தப் பூட்டின் வசதிகள் உங்கள் ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தும்.
நோ கீ என்பதன் சுருக்கமாக நோக் எனப்படும் இந்தப் பூட்டு ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும். இந்தப் பூட்டை உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை இணையத்தில் டவுன்லோடு செய்துகொண்டால் போதும். இரண்டு சிக்னலும் மேட்ச் ஆகும்போது மட்டுமே பூட்டு திறக்கும். இந்தப் பூட்டை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். சைக்கிளில் சென்று சைக்கிளைப் பூட்டலாம், பைக்கைப் பூட்டலாம், ரயிலில் செல்கிறீர்களா? லக்கேஜ்களை ஒன்றாக இணைத்துப் பூட்ட வேண்டுமா? கவலையே இல்லை இந்தப் பூட்டு உங்களுக்குக் கைகொடுக்கும்.
ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு வழிகளில் இயங்கும் போன்களிலும் இந்தப் பூட்டின் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் பூட்டைத் திறக்க விரும்பினாலும் அதற்கும் வழியிருக்கிறது. ஒரு முறையோ அல்லது எப்போதுமோ அவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்தப் பூட்டை உபயோகப்படுத்தும் வாய்ப்புகள் அந்த அப்ளிகேஷனில் உள்ளது.
யார் யார் எப்போதெல்லாம் பூட்டைத் திறந்தார்கள் எனும் ஹிஸ்டரியையும் அப்ளிகேஷன் மூலம் பார்த்துக்கொள்ளலாம். எனவே பாதுகாப்பு பற்றிப் பயப்பட வேண்டியதில்லை. ஒருவேளை மொபைல் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டால் அந்த நேரத்தில் என்ன பண்ணுவது என்ற கவலையும் வேண்டாம். அதற்கும் பாஸ்வேர்டு செட் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. நோக் பூட்டில் உள்ள பேட்டரி அதற்குப் பயன்படும். ஸோ, டோண்ட் வொரி.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை 89 அமெரிக்க டாலர். ஆனால் இப்போதைக்கு 59 அமெரிக்க டாலர். இதுவரை ஒரு லட்சம் டாலர் அளவுக்கு புக்கிங் ஆகிவிட்டது. ஒரு பூட்டு வேண்டுமானாலும் புக் செய்யலாம். இரண்டு, மூன்று, ஐந்து, பத்து என மொத்தமாகவும் புக் செய்யலாம். அமெரிக்காவுக்கு வெளியே என்றால் டெலிவரி சார்ஜாக கூடுதல் 15 டாலர் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
THANKS ; THE HINDU

அசத்தும் அப்பாடக்கர்கள்...!

PUTHIYA THOLILNUTPAM
சிட்டிஸன்கள் அனைவரும் நெட்டிஸன்கள் இல்ல. ஆனா நெட்டிஸன்கள் அனைவரும் சிட்டிஸன்கள். காம்படிடிவ் எக்ஸாமில் கேட்கப்படும் ரீஸனிங் கொஸ்டினில் உள்ள ஸ்டேட்மெண்ட் மாதிரி இருக்கிறதா? இப்போதைக்கு சினிமாக்காரங்களையும் இலக்கிய வாதிகளையும் கலக்குற ஆளுங்க இந்த நெட்டிஸன்கள்தான். பத்திரி கைகளுக்கு ஈடாக படு சுறுசுறுப்பா களத்தில இறங்கி பட்டயக் கிளப்புறவங்க இவங்கதான்.
ஒரு படம் ரிலீஸாச்சுன்னா பத்திரிகை விமர்சனம்கூட ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வெளிவரும். ஆனா நம்ம நெட்டிசன்கள் இருக்காங்களே படு கில்லாடிங்க. பத்தே நிமிஷத்துல படத்தின் ஜட்ஜ்மெண்ட எழுதிடறாங்க. கையில மொபைலோட தியேட்டருக்குள்ள போறாங்க.
பொறுமையை எருமை மாட்டு சாணத்துல வச்சி எங்கேயோ தூர கடாசிடறாங்க. பத்தே நிமிஷம்தான். படம் சரியில்லயா, கண்களப் பெரிய திரையிலிருந்து கையகலத் திரைக்கு நகர்த்திட்றாங்க. விரல் நுனியில் வேலையைக் காட்டிடறாங்க. சும்மா மின்னல் வேகத்துல ட்விட்டரில் ஆரம்பிக்கிற இவங்களோட லொள்ளு ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ், ப்ளாக் போன்ற இண்டெர்நெட்டின் அத்தனைப் பக்கங்களிலும் கரை புரண்டு ஓடும். அதில் மாட்டிக்கிட்டவங்க கதி அவ்ளோதான்.
இலக்கியவாதிங்களயும் சும்மா வூடு கட்டி அடிக்கிறாங்க இந்த நெட்டிஸன்கள். யாராவது சீரியஸா எதையாவது சொல்லிட்டா போச்சு, துடிப்போட இவங்க போடுற ஒவ்வொரு கமெண்டும் எமகாதகம்.
இவங்களோட விமர்சனத்த நினைச்சாலே சினிமாக்காரங்க அடிவயித்துல டைம்பாம் டிக் டிக்ன்னு ஓட ஆரம்பிச்சிருது. இரக்கமே இல்லாம ஒரே அடியா போட்டுத் தாக்குறது அவங்களோட ஸ்பெஷல் ஆபீஸ் ரூம் டிரீட்மெண்ட். அப்படித்தான் சமீபத்தில் தைரியசாலியா களம் இறங்கிய பயப்படாதவன் ஒருத்தன ஓட ஓட விரட்டினாங்க. இவங்க கழுவி ஊத்துற ஸ்டைல பார்க்கும்போது, கழுவில் ஏற்றுவது எவ்வளவோ மேல்னு தோணும். இந்த நெட்டிஸன்கள் சொல்ற உண்மையால பாதிக்கப்பட்ட செண்டிமெண்ட் இயக்குநர் ஒருத்தர் ரத்தக் கண்ணீர் வடிச்ச கதையும் உண்டு.
இவங்கள பகைச்சுக்கவும் முடியாது பக்கத்துல வச்சுக்கவும் முடியாதுங்கிறதால சினிமாக்காரங்க பாவம் தவியாத் தவிக்கிறாங்க. ஏன்னா ஒரு படத்த காரணம் புரியாம தலையில தூக்கிவச்சு ஆடுவாங்க, அதே நேரம் இன்னொரு படத்துக்கு டண்டணக்கா டனக்குனக்கா பாடிடுவாங்க. இவங்களோட பாப்புலேஷன் ரொம்ப ஜாஸ்தியாயிட்டு வருது. அதனால் எந்த ரூட்டுலயும் போய் தப்பிக்க முடியாது. எல்லா சிக்னல்யும் இவங்க ஆளுங்க கையில் நெட் கனெக்‌ஷன் உள்ள மொபைலோட தயாரா நிப்பாங்க.
சமீபத்தில் ஒரு படம் சேது மாதிரி லேட் பிக்அப் ஆகும்னு இயக்குநர் சொன்னாரு. நம்மாளு, ஓடினாதான ரீச் ஆகன்னு கமெண்ட் போடுறார். என்ன செய்ய முடியும் சொல்லுங்க. இப்பவே கண்ணக் கட்டுதேன்னு யூ டர்ன் போட்டு போறத தவிர, வேறு வழியே இல்லாமப் பண்ற இவங்களோட ஸ்பெஷாலிட்டி. இவங்கள நாடு கடத்தவும் முடியாது. எந்த நாட்டுக்குப் போனாலும் கையில ஸ்மார்ட் போனும், மனசுல ஸ்மார்ட் கமெண்டும் இவங்கட்ட ரெடியா இருக்குமே.

THANKS ; THE HINDU

சூடு பிடிக்கும் ஸ்மார்ட் வாட்ச் சந்தை...!

நோபோன்
PUTHIYA THOLILNUTPAM
புதிய அறிமுகங்களால் ஸ்மார்ட் போன் துறையில் போட்டி அதிகமாகி, சந்தையும் பரந்து விரியத் தொடங்கியிருக்கிறது. ஸ்மார்ட் போன்கள் போலவே இப்போது ஸ்மார்ட் வாட்ச் சந்தையும் புதிய அறிமுகங்களால் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளது. இணையவாசிகள் நிதி திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் அறிமுகமான பெப்பிள் ஸ்மார்ட் வாட்சைத் தொடர்ந்து இந்தச் சந்தையில் பெரிய நிறுவனங்களும் கால் பதித்து வருகின்றன.
ஜிவாட்ச் 2
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சமீபத்திய தகவல் எல்.ஜி. நிறுவனம் ஜி வாட்ச்2 எனும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே அறிமுகமான ஜிவாட்சின் மேம்பட்ட வடிவாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் பெர்லினில் நடைபெறும் ஐ.எப்.ஏ தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாட்சில் கூகுளின் குரல் உணரும் வசதியும் இணைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் டிஸ்பிளேவும் மேம்பட்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனமும் அடுத்த மாதம் புதிய அறிமுகங்களுக்குத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது. 2 புதிய ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சும் இதில் அடங்கும். இந்த மோட்டோ 360 ஆண்ட்ராய்டு வியர் ஸ்மார்ட் வாட்ச் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அதன் புகைப்படம் மற்றும் விலைவிவரம் மின்வணிக தளம் மூலம் வெளியாகி விட்டது.
உடனே அந்த இணையப் பக்கம் நீக்கப்பட்டு விட்டாலும் விலை ( 249.99 டாலர்) மற்றும் வாட்ச் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கசிந்துவிட்டன. மணிக்கட்டை அசைப்பது மூலம் போனில் அழைப்பது யார் அல்லது என்ன மெயில் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இவை தவிர ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் என்று நம்பப்படும் ஐவாட்ச் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஜிவாட்ச் 2
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் சமீபத்திய தகவல் எல்.ஜி. நிறுவனம் ஜி வாட்ச்2 எனும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே அறிமுகமான ஜிவாட்சின் மேம்பட்ட வடிவாக இது இருக்கும் எனத் தெரிகிறது. அடுத்த மாதம் பெர்லினில் நடைபெறும் ஐ.எப்.ஏ தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாட்சில் கூகுளின் குரல் உணரும் வசதியும் இணைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் டிஸ்பிளேவும் மேம்பட்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதனிடையே மோட்டோரோலா நிறுவனமும் அடுத்த மாதம் புதிய அறிமுகங்களுக்குத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது. 2 புதிய ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சும் இதில் அடங்கும். இந்த மோட்டோ 360 ஆண்ட்ராய்டு வியர் ஸ்மார்ட் வாட்ச் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே அதன் புகைப்படம் மற்றும் விலைவிவரம் மின்வணிக தளம் மூலம் வெளியாகி விட்டது.
உடனே அந்த இணையப் பக்கம் நீக்கப்பட்டு விட்டாலும் விலை ( 249.99 டாலர்) மற்றும் வாட்ச் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கசிந்துவிட்டன. மணிக்கட்டை அசைப்பது மூலம் போனில் அழைப்பது யார் அல்லது என்ன மெயில் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இவை தவிர ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் என்று நம்பப்படும் ஐவாட்ச் பற்றிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஐபோன் 6 எல்
இதே போல ஆப்பிளின் அடுத்த ஐபோன் பற்றியும் புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் 9- ம் தேதி வெளியாகலாம் எனச் சொல்லப்படும் ஐபோன் இரு வடிவங்களில் இரு அளவுகளில் வெளியாகும் என்பதைப் பல தொழில்நுட்ப தளங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த போன்களின் ஒன்று ஐபோன் 6 என்றும் மற்றொன்று ஐபோன் 6 எல் என்றும் குறிப்பிடப்பட இருப்பதாக ஆப்பிள் டெய்லி எனும் தளம் தெரிவிக்கிறது.
இந்த போன்கள் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் கொண்டதாக இருக்கும் என்றும் அந்தத் தளம் தெரிவிக்கிறது. ஐபோன் 6 தொடர்பாகக் கசிந்துள்ள புதிய புகைப்படம் இதன் பேட்டரியும் சற்றுப் பெரிதாக இருக்கும் என உணர்த்துகிறது. ஆக, டிஸ்பிளேவும் பெரிதாகத் தான் இருக்கும். ஆப்பிள் அப்டேட்களுக்குப் புகழ்பெற்ற பிரெஞ்சு வலைப்பதிவு மூலம் இந்தப் புகைப்படம் கசிந்துள்ளது.
இந்தத் தகவல்களை எல்லாம் மீறி ஆப்பிள் ஐபோன் 6-ல் வியக்க வைக்குமா? என்று பார்க்கலாம்.
குறைந்த விலை போன்கள்
புதிய அறிமுகங்கள் பற்றிய பரபரப்பு ஒரு புறம் இருக்க, ஸ்மார்ட் போன் சந்தையில் குறைந்த விலையிலான போன்களே செல்வாக்கு பெற்று வருவதாக ஐ.டி.சி. (இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் ) தெரிவிக்கிறது. இந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கைப் படி மார்ச் முதல் ஜூன் வரையான காலத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில் உலக ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆண்ட்ராய்டு போன்கள் 84.7 சதவீதமாக இருந்திருக்கிறது. இதற்குக் காரணம் 200 டாலருக்கும் கீழான குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை போன்கள் ஆண்ட்ராய்டு போன்களில் 58.6 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் முன்னிலை வகிப்பதாகவும் மைக்ரோமேக்ஸ் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரும் மாதங்களில் முன்னணி ஐந்து நிறுவனங்களிடையே இடங்கள் மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான ஒரு ஆய்வு சாம்சங்கை மைக்ரோமேக்ஸ் முந்தி விட்டதாகத் தெரிவித்தது.
நோபோன்
ஐபோன் போன்ற போன்கள் இருக்கட்டும்; ,நோபோன் பற்றித் தெரியுமா? நீர்புகாதத் தன்மை கொண்டது, என்.எஸ்.ஏ. போன்ற அமைப்புகள் உளவு பார்க்க முடியாதது என்றெல்லாம் இந்த போன் பற்றிச் சொல்லப்படுகிறது. இதில் வை-ஃபையும் கிடையாது. புளுடூத்தும் இல்லை. பேட்டரியும் கிடையாது . பிறகு எப்படிப் பேசுவது? இந்த போன் பேசுவதற்கு அல்ல; இந்த போனைக் கையில் வைத்துக்கொண்டால் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் உணர்வைப் பெறலாம்.
அதே நேரத்தில் போனை விடச் சுற்றிலும் உள்ளவர்களோடு அதிகமான முறையில் தொடர்பு கொள்ளலாம் என்று நோபோனுக்கான இணையதளம் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்மோன் மோகத்துக்கு அழகான விமர்சனமாக அமைந்துள்ள இந்த நோபோன் நிஜத் தயாரிப்பா அல்லது முழுவதும் நையாண்டியா எனத்தெரியவில்லை . ஆனால் நோபோன் தளத்தில் இதன் சிறப்பம்சங்கள்(!) மற்றும் செயல்பாடு பற்றிய சுவாரஸ்யமான வீடியோவைப் பார்க்கலம்.(http://www.nophone.eu/).

THANKS ; THE HINDU

ஐ.க்யூவில் உலக சாதனை படைக்கும் சிறுமி...!

PUTHIYA THOLILNUTPAM
பதினான்கு வயதே நிரம்பிய விசாலினி, தன் வயதுக்கே உரிய உற்சாகத்துடன் தோழிகளோடு தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள்.
இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார்.
உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் முறியடித்து, 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறார்.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் விசாலினியின் பெயர் இடம்பெற வில்லை. பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை இடம்பெற முடியும். இதனால் தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.
போதிய ஊடக கவனம் கிடைக்காமல் இருக்கிறார் இந்த அறிவுச்சுடர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸின் ஐ.க்யூ. திறன் 160தான், உலக செஸ் சாம்பியன் பாலி பிஸ்சரின் ஐ.க்யூ திறன் 180தான் எனில் விசாலினியின் 225ஐ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
விசாலினியின் சாதனைகள் பத்து வயதிலேயே தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையைப் பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
பதினான்கு வயதிற்குள் பள்ளிப் படிப்பிலும் இருமுறை டபுள் புரமோஷன் வாங்கியிருக்கும் இவள் படிப்பது பாளையங்கோட்டையில் உள்ள லட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்.
கடந்த ஆண்டு மங்களூரில் நடைபெற்ற NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, பன்னாட்டு அறிஞர்களோடு கணினியில் நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினாள்.
விசாலினியின் அறிவுத்திறன் கண்டு வியப்புற்ற அவர்கள், நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பத்தில் இவளுக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதுவரை இதேபோன்ற ஏழு உலக தகவல் தொழில்நுட்ப மாநாடுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு ‘கீ ஸ்பீச்’ கொடுத்திருக்கிறாள்.
சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அழைப்பை ஏற்று, அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் ’ கவுரவப் பேரா சிரியராகக் கலந்து கொண்டு ‘கான்செப்ட் ஆஃப் நெட் ஒர்க்கிங் அண்ட் க்ளவுட் கம்ப் யூட்டிங்’ என்ற தலைப்பில் 2 மணி நேர விரிவுரையாற்றி வியக்க வைத்திருக்கிறார்.
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இவர் ஒருவயது வரை ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சிரமப்பட்டி ருக்கிறாள். விசாலினியின் தாய் திருமதி.
சேதுராகமாலிகா, குழந்தை மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, அவளுடன் இடைவிடாமல் பேசி, கதைகள் சொல்லி, ஸ்லோகங்கள் பாடிக் காட்டி விசாலினியின் பேசும் திறனை வளர்த்திருக்கிறார்.
இன்று விசாலினியின் நுண்ணறிவுத் திறனைக் கண்டு அறிஞர்கள் உலகம் வியந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாதனைச் சிறுமியின் தந்தை கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிஷியன்.
இதுவரை விசாலினி MCP (Microsoft Certified Professional) CCNA (Cisco Certified Network Associate), CCNA Security(Cisco Certified Network Associate Security), OCJP (Oracle Certified Java Professional) ஆகிய தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
தனக்கான இணைய தளத்தை யும் தனது மடிக்கணினி கொண்டு தானே வடிவமைத்திருக்கிறார். இவர் சாதனைகள் இப்போதைக்கு நிற்காது என்பது மட்டும் நிச்சயம்.

THANKS ; THE HINDU

ஹிட்டடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆப்ஸ்...!

PUTHIYA THOLILNUTPAM
ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த சுதந்திர தின ஸ்பெஷலாக ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மான் ஆப்ஸை வெளியிட்டிருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் இருக்கும் சுமார் 2.4 கோடி ரசிகர்கள் இந்த ஆப்ஸ் மூலம் ஏ.ஆர். ரஹ்மானுடன் நேரிடையாகத் தொடர்பில் இருக்க முடியும். ஐஒஎஸ், ஆண்ட்ராய்டில் தற்போது இந்த ஆப்ஸ் கிடைக்கிறது.
ஏ. ஆர் . ரஹ்மானின் ட்வீட்ஸ், பேஸ்புக் அப்டேட்ஸ், இசை வீடியோக்கள், படங்கள் என இந்த ஆப்ஸ் வசதி மூலம் பார்க்கலாம். ரஹ்மான், சேகர் கபூர், சமீரா பங்கரா தொடங்கியிருக்கும் ஆன்லைன் மல்டி சேனல், க்யூக்கி.காம் (Quiki.com) இணைந்து இந்த ஆப்ஸை உருவாக்கியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் இசை வெள்ளத்தில் இனி மாடர்னா மூழ்கலாம்.

THANKS ; THE HINDU

பட்ஜெட் ஹெட்போன்கள்...!

நீங்கள் தீவிரமான இசைப் பிரியர் என்றால் ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும் ஹெட்போன்களை வைத்து மட்டும் உங்கள் இசை தாகத்தைத் தணிக்க முடியாது. பல்வேறு விதமான ஹெட்போன்கள் அவசியம். அப்படிப்பட்ட ‘இசைத் தீவிரவாதியான’ உங்கள் ரசனைக்காகச் சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ஹெட்போன்களின் லிஸ்ட்...
பனாசோனிக் எர்கோ ஆர்பி-டிசிஎம் 125 (Panasonic Ergo RP-TCM 125)
பனாசோனிக் எர்கோ ஹெட்செட்டின் விலை ரூ. 799. அமேசான் தளத்தில் தற்போது 15 சதவீத தள்ளுபடியில் 679 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எர்கோ கம்ப்ஃபோர்ட் மைக்ரோபோனும், ஆக்டாரிப் ஸ்பீக்கரும் இதன் சிறப்பம்சம்.
சென்ஹைசர் சிஎக்ஸ் 180 (Senheiser CX 180)
சென்ஹைசர் சிஎக்ஸ் 180 சிறந்த ஆடியோ பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் இன்-இயர் ஹெட்போன். இதன் ஃபிங்கர்-கான்ட்ர்ட் டிசைன் பலதரப்பினிரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது 849 ரூபாய்க்குக் கிடைக்கும் சென்ஹைசர் சிஎக்ஸ் 180தான் அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற தளங்களில் அதிகமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஹெட்போன்.
கோவான் இஎம்1 (Cowon EM1)
கோவான் இஎம்1 தெளிவான துல்லியமான ஆடியோவை வழங்கக்கூடியது. சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போனின் விலை ரு. 799. இதன் எர்கோனாமிக் டிசைனிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சோனி எம்டிஆர் இசட்எக்ஸ் - 100ஏ
(Sony MDR-ZX-100A)
சோனி எம்டிஆர் இசட்எக்ஸ் - 100ஏயின் ஹெட்பேண்ட் ஸ்டைல், ஆடியோ தரம் மிகவும் ஹிட். 700 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ஹெட்போனில் தடையின்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாட்டு கேட்டு உங்கள் இசை ரசனையைத் தணிக்கலாம்.

THANKS ; THE HINDU

காருக்குள்ளே சிக்னல்...!

PUTHIYA THOLILNUTPAM
கார் ஓட்டுபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ‘ட்ராபிக்’. எந்த இடத்தில் எப்போது சிக்னல் விழும் என்று தெரியாது.
இந்நிலையில் காரில் சென்றுகொண்டிருக்கும்போதே அடுத்த சிக்னலின் நிலையை சொல்லும் விதமாக புதுக்கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அமெரிக்காவின் விர்ஜினியா கல்வி நிறுவன ஆய்வு மாணவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கையளவு உள்ள இந்த கருவியில் திரை ஒன்றும் உள்ளது. இதை காரில் பொருத்திவிட்டால், அடுத்தடுத்து உள்ள சிக்னல் குறித்தும், நகரில் எந்த பகுதியில் ட்ராபிக் ஜாம் என்பதையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

THANKS ; THE HINDU